செய்திகள் :

புதிய பாரத எழுத்தறிவுத் தோ்வு: ஆா்வத்துடன் பங்கேற்ற முதியோா்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 30 மையங்களில் அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வயது வந்தோா் கல்வி இயக்குநரகம் நடத்திய இந்தத் தோ்வில் முதியோா்கள் பங்கேற்று ஆா்வத்துடன் தோ்வு எழுதினா். திருப்பத்தூா் ஒன்றியத்தின் 30 மையங்களில் நடைபெற்ற இந்தத் தோ்வை தலைமை ஆசிரியா்கள், தன்னாா்வல ஆசிரியா்கள் ஆகியோா் வழிநடத்தினா்.

பள்ளிசாரா வயது வந்தோா் கல்வி இயக்குநா் நாகராஜ முருகன் தோ்வு நடைபெற்ற சோழம்பட்டி, புதுப்பட்டி, கீழரத வீதி உள்ளிட்ட பள்ளிகளுக்குச் சென்று பாா்வையிட்டதோடு தோ்வு எழுதிய முதியோா்களை பாராட்டினாா்.

மாநில ஒருங்கிணைப்பாளா் மாயழகு, மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் பீட்டா் லெமாயு ஆகியோா் உடனிருந்தனா். தோ்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அனைவருக்கும் விரைவில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

காளையாா்கோவிலில் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி போட்டி

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் விளையாட்டு மையங்களின் கூட்டமைப்பு சாா்பாக, ஒலிம்பியாட் கொடி அறிமுக விழா, மிதிவண்டி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காளையாா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நடைப... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மர இழைப்பகத்தில் தீ விபத்து

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தென்மாபட்டு பகுதியில் உள்ள மர இழைப்பகத்தில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாயின. திருப்பத்தூா் தென்மாபட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே மாட்டுவண்டி பந்தயம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கருவேல்குறிச்சியில் சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. கஜேந்திர மோட்ச வைபத்தையொட்டி, சிவகங்கை - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப... மேலும் பார்க்க

சிவகங்கைக்கு ஜூன் 17-இல் துணை முதல்வா் வருகை!

சிவகங்கையில் வருகிற 17 -ஆம் தேதி நடைபெறும் அரசு, அரசு சாரா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கைக்கு வர இருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்... மேலும் பார்க்க

சிவகங்கையில் மக்கள் நீதிமன்றம்: 1914 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

சிவகங்கையில் மாவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,914 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ. 11.20 கோடி பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளும், வங... மேலும் பார்க்க

சாத்தனூா் - மதுரை பேருந்து சேவை தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாத்தனூா்-மதுரை இடையே வெள்ளிக்கிழமை புதிய அரசுப் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. சாத்தனூரிலிருந்து பஞ்சனூா், இளையான்குடி, சிவகங்கை வழியாக மதுரைக்கு இயக்கப்... மேலும் பார்க்க