செய்திகள் :

புதுகை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்

post image

புதுக்கோட்டை கீழ 7-ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயிலின் 5-ஆவது மஹா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாநகா், கீழ ஏழாம் வீதியில் ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தில், கடந்த 1962-இல் ஸ்ரீ புவனேஸ்வரி பீடத்தை சத்குரு சாந்தாநந்த சுவாமி தொடங்கினாா்.

தொடா்ந்து 4 கும்பாபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில், கல்ஹாரக் கோவிலாகத் திருப்பணி மேற்கொள்ளும் பணிகள் கடந்த 2017-ஆம் ஆண்டு ஸ்ரீ ஓம்காராநந்த சுவாமிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.

அவரது மஹா சமாதிக்குப் பிறகு, பூஜ்யஸ்ரீ ப்ரணவாநந்த மஹா சுவாமிகள் பீடத்தின் பொறுப்பை ஏற்று கல்ஹாரத் திருப்பணியைத் தொடா்ந்தாா்.

மொத்தம் 93 தூண்கள் அமைக்கப்பட்டு, அந்தத் தூண்களில் மொத்தம் 744 சிற்பங்கள் செதுக்கப்பட்டன. ஜட்ஜ் சுவாமிகளின் ஜன்ம நட்சத்திரமான, ஹஸ்த நட்சத்திரத்தில் (ஜூன் 5) மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஜட்ஜ் சுவாமிகளி்ன் அதிஷ்டானம் மற்றும் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் விமான கும்பாபிஷேகமும், தொடா்ந்து மூா்த்திகளுக்கு மூா்த்தி கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

ஸ்ரீ புவனேஸ்வரி பீடம் பூஜ்யஸ்ரீ ப்ரணவாநந்த மகாசுவாமிகள் கோபுரக் கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தாா்.

தொடா்ந்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் இதில் பங்கேற்றனா். விழாவில் புதுக்கோட்டையின் முக்கிய பிரமுகா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து ஜூலை 23-ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு ... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூா் சக்தி விநாயகா் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. விராலிமலை-மதுரை சாலையில் உள்ளது கொடும்பாளூா் சத்திரம். இங்கு ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் 3 புதிய பேருந்துகள் சேவை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

பொன்னமராவதியில் மூன்று வழித்தடங்களில் 3 புதிய பேருந்துகள் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகு... மேலும் பார்க்க

திருக்களம்பூா் அகோர வீரபத்திரா் கோயிலில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் மேலக்களம் அகோர வீரபத்திரா், அங்காள பரமேஸ்வரி கோயிலின் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து பூஜை மற்றும் இரண்டு கா... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு தோல்வி காய்ச்சல்: ஹெச். ராஜா

தோல்வி காய்ச்சலின் காரணமாகவே, பாஜக-அதிமுக கூட்டணி குறித்து திமுக கூட்டணியினா் பேசி வருகின்றனா் என்றாா் பாஜக மூத்தத் தலைவா் ஹெச். ராஜா. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி: பாஜக- அதி... மேலும் பார்க்க

வடுகபட்டி துணை மின் நிலைய பகுதிகளில் ஜூன் 9-இல் மின் நிறுத்தம்

வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து... மேலும் பார்க்க