செய்திகள் :

புதுச்சேரி: `ஸ்மார்ட் சிட்டி பணியில் முறைகேடு, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ - சாடும் அதிமுக

post image

புதுச்சேரி அதிமுக-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``புதுச்சேரியில் மத்திய அரசின் 50% சதவிகித நிதிப் பங்களிப்புடன் கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணி, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முடக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் ரூ.670 கோடி மதிப்பீட்டில் 89 திட்டங்களை செயல்படுத்த பல்வேறு துறைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் எந்தப் பணியும் துவக்கப்படாமல் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. தற்போது அரவிந்தர் வீதி முதல் திப்புராயப்பேட்டை கழிவு நீர் வாய்க்காலை மேம்படுத்துவதற்காக, நல்ல நிலையில் இருக்கும் 11 பாலங்கள் இடிக்கப்பட்டு புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

இதற்கு ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நகரப்பகுதிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவதற்காக ரூ.100 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டிருக்கிறது. குமரகுருபள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு, அண்ணா திடல், புதிய பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம், பள்ளவாய்க்கால் போன்ற பணிகள் முடிவுற்றிருக்கின்றன. அந்தப் பணிகளுக்கான செலவு விபரம் குறித்த விரிவான விசாரணைக்கு ஆளுநரும் முதல்வரும் உத்தரவிட வேண்டும்” என்றார்.

Trump: "Countries are calling us up, kissing ***" - உலக நாடுகளை கேலி செய்த ட்ரம்ப்!

"These Countries are Calling us up, kissing my a**"தேசிய குடியரசுக் கட்சி காங்கிரஸ் குழுவின் (NRCC) நன்கொடையாளர் விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசிய வார்த்தைகள் இவை. உலக நாடுகள் மீதான ... மேலும் பார்க்க

நீட் விலக்கு: `உச்ச நீதிமன்றம் அளித்துள்ள நம்பிக்கை'- அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதென்ன?

நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக திமுக தலைமையில் அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கிய கூட்டத்தில் பங... மேலும் பார்க்க