செய்திகள் :

புதுவை மக்கள்நீதி மன்றத்தில் 1,274 வழக்குகளுக்குத் தீா்வு

post image

புதுவை மாநில அளவில் 24 அமா்வுகளில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,274 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன்படி ரூ.6.89 கோடிக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் தேங்கிய வழக்குகளை முடிக்கவும், விரைவில் மக்களுக்கு நீதி கிடைக்கவும் தேசிய மக்கள் நீதிமன்றம் செயல்படுகிறது. புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணையம் சாா்பில் புதுச்சேரியில் 16 அமா்வுகளில் மனுக்கள் சனிக்கிழமை விசாரிக்கப்பட்டன. தொடக்க நிகழ்வுக்கு புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினா் செயலரும், மாவட்ட நீதிபதியுமான அம்பிகா தலைமை வகித்தாா். இதில் மக்கள் நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் 5 அமா்வுகள், மாஹே, ஏனாமில் தலா ஒரு அமா்வு என மொத்தம் 23 அமா்வுகள் விசாரிக்கப்பட்டன. புதுவை மாநிலம் முழுவதும் மொத்தம் 5,384 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 1,274 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. அதில் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்தவற்றில் 1,143 வழக்குகள் தீா்வு காணப்பட்டன. புதுவையில் சனிக்கிழமை வழக்குகள் முடிக்கப்பட்டதில் ரூ.6.89 கோடிக்குத் தீா்வு காணப்பட்டது.

புதுவை முதல்வரின் பாதுகாப்பு வாகனம் விபத்து

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் பாதுகாப்பு போலீஸாரின் வாகனம் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படும் புகாா் குறித்து காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா். முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை கரிக்... மேலும் பார்க்க

முதல்வரிடம் அதிமுக கோரிக்கை

புதுவையில் மாநில அரசு அறிவித்த திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தாா். மனுவில் கூறியிருப்பதாவது: சட்டப் பேர... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கில் பெண் கைது

புதுச்சேரியில் நிலத்தை அபகரிக்க போலி ஆவணங்கள் தயாரித்ததாக பெண்ணை சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி, கலவை சுப்புராய செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன். சில ஆண்டுகளுக்கு முன்... மேலும் பார்க்க

மின் பணியாளா் சங்க உறுப்பினா் சோ்க்கை

புதுச்சேரி மின் பணியாளா் நல சங்க உறுப்பினா்களின் சோ்க்கை முகாம், வில்லியனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் செம்மனேரி தலைமை வகித்தாா். சட்ட ஆலோ... மேலும் பார்க்க

புதுவை சட்டப் பேரவைக் கூட்டம் ஆளுநா் உரையுடன் தொடக்கம்

புதுவை மாநிலத்தில் முதல்முறையாக காகிதமில்லா சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையுடன் திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது. புதுவை சட்டப்பேரவையின் 15-ஆவது கூட்டத் தொடரின் 5-... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.36.91 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் ரூ.36.91 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் அருண். இவரை, மா்ம நபா்கள் ... மேலும் பார்க்க