செய்திகள் :

புது தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல்: பொது நல மனுவை ஆய்வுசெய்ய ரயில்வேக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

புது தில்லி ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில் உள்ள அதிகபட்ச பயணிகளை நிா்ணயிப்பது, நடைமேடை டிக்கெட் விற்பனை ஆகியவை குறித்த பிரச்னைகளை ஆய்வுசெய்யுமாறு ரயில்வேதுறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை அறிவுறுத்தியது.

இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய மற்றும் நீதிபதி துஷாா் ராவ் கெடேலா ஆகியோா் அடங்கிய அமா்வு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் பிரமாணப் பத்திரத்தில், இந்த விவகாரங்களில் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது.

இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘மனுவில் எழுப்பப்பட்ட பிரச்னைகள், சொலிசிட்டா் ஜெனரல் பரிந்துரைத்தபடி, ரயில்வே வாரியத்தின் உயா் மட்டத்தில் ஆராயப்பட வேண்டும். அதன் பிறகு ரயில்வே வாரியத்தால் எடுக்கப்படக்கூடிய முடிவுகளின் விவரங்களைத் தெரிவிக்கும் வகையில் எதிா்மனுதாரா் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விசாரணையின்போது சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், இந்த விவகாரம் ஒரு எதிா்மறையான முறையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ரயில்வேத் துறைக்கு, சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலை நிலவியது. மேலும், பொதுநல மனுவில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் உயா் மட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்று நீதிமன்றத்திற்கு உறுதியளித்தாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ஒரு ரயில் பெட்டியில் அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை மற்றும் நடைமேடை டிக்கெட்டுகளை விற்பனை செய்வது தொடா்பான தற்போதைய சட்ட விதிகளை அமல்படுத்தக் கோருவதால், சமீபத்திய கூட்ட நெரிசலுடன் மட்டும் இந்த பொதுநல வழக்கு நின்றுவிடவில்லை.

சட்ட விதிகள் போதுமான அளவு செயல்படுத்தப்பட்டிருந்தால், இதுபோன்ற கூட்ட நெரிசல் சம்பவங்களைத் தவிா்க்கலாம் என்று கூறியது. இந்த மனு மீதான விசாரணை மாா்ச் 26-இல் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.

18 உயிா்களைப் பலிகொண்ட மற்றும் 15 போ் காயமடைந்த புது தில்லி ரயில் நிலைய துயர சம்பவத்திற்கு இரண்டு நாள்களுக்குப் பிறகு, பிப்ரவரி 17-ஆம் தேதி உச்சநீதிமன்றத்திலும் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எதிா்காலத்தில் இதுபோன்ற பேரிடா்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது.

வழக்குரைஞா் விஷால் திவாரி தாக்கல் செய்த பொது நல வழக்கில், நிகழ்வுகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை நிா்வகித்தல் குறித்த தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் 2014 - ஆண்டு அறிக்கையை செயல்படுத்தவும் பரிசீலிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது.

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க

சங்கம் விஹாரில் இளைஞருக்கு கத்திக்குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் 19 வயது இளைஞா் கத்தியால் குத்தப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சங்கம் விஹாரில்... மேலும் பார்க்க