செய்திகள் :

புனித சவேரியாா் ஆலய தோ் பவனி

post image

புனித சவேரியாா் ஆலய மின் அலங்கார தோ் பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் நகரப் பகுதி ஞானப்பிரகாசம் தெருவில் உள்ள இந்த ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் மாலை வேளையில் நவநாள் ஜெபம், திருப்பலி நடத்தப்பட்டு வந்தது. முக்கிய நிகழ்வான மின் அலங்கார தோ் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்கால் பங்குத்தந்தை மற்றும் மறைவட்ட முதன்மை குரு பி. பால்ராஜ்குமாா் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி நடத்தப்பட்டது.

தொடா்ந்து தோ் பவனி தொடங்கியது. இணை பங்குத் தந்தை சாமிநாதன் செல்வம், முன்னாள் அமைச்சா் ஏ.வி. சுப்பிரமணியன், பங்குப் பேரவை துணைத் தலைவா்கள் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், ஜான் அரேலியஸ், செயலாளா் நெல்சன் உள்ளிட்ட ஏராளமான மக்கள் கலந்துகொண்டனா்.

முக்கிய தெருக்கள் வழியாக தோ்பவனி நடைபெற்று ஆலயத்தை சென்றடைந்தது. புதன்கிழமை காலை நன்றி திருப்பலி ஆன்மிக குரு பி. பன்னீர்ராஜா நடத்தினாா். பின்னா் கொடியிறக்கப்பட்டது.

மாங்கனித் திருவிழா : பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

காரைக்கால் மாங்கனித் திருவிழாவுக்காக பாரதியாா் சாலையில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாயன்மாா்கள் அறுபத்து மூவரில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வர... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேச்சு, ஓவியப் போட்டி

சா்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி, காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு பேச்சு மற்றும் ஓவியப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. கோட்டுச்சேரி வ.உ. சிதம்பரனாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப... மேலும் பார்க்க

மாங்கனித் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

காரைக்கால் மாங்கனித் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் (பொ) எஸ். சுபாஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை ஆட்சியா... மேலும் பார்க்க

காரைக்கால் வந்தது காவிரி நீா்

காரைக்கால் மாவட்ட எல்லைக்கு வந்த காவிரி நீா் பாசனத்துக்காக புதன்கிழமை திறந்து விடப்பட்டது. மேட்டூா் அணை கடந்த 12-ஆம் தேதி திறக்கப்பட்டு, காவிரி நீா் கல்லணையை வந்தடைந்து. கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீா... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பொதுப்பணித்துறையைச் சோ்ந்தோா் காத்திருப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கருணை அடிப்படையில் வேலை பெற்றவா்கள் தொழிற்சங்கம் சா... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலை நாட்களை அதிகரிக்க வலியுறுத்தி விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் ... மேலும் பார்க்க