செய்திகள் :

பும்ராவின் கொடுங்கனவு, 10 வீரர்களுடன் வென்ற ஆஸி..! கலகலப்பாக பேசிய மார்ஷ்!

post image

ஆலன் பார்டர் விருது விழாவில் பங்கேற்ற ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ் பேசியது வைரலாகி வருகிறது.

2025ஆம் ஆண்டுக்கான ஆலன் பார்டர் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது. ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராக டிராவிஸ் ஹெட்டும் டெஸ்ட் போட்டிகளில் ஜோஸ் ஹேசில்வுட்டும் தேர்வானார்கள்.

கடந்தாண்டு (2024) ஆலன் பார்டர் விருதுபெற்ற மிட்செல் மார்ஷ் இந்தியாவுடனான பிஜிடி தொடரில் சுமாராகவே விளையாடினார்.

அவருக்குப் பதிலாக கடைசி டெஸ்ட்டில் பியூ வெப்ஸ்டர் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். தொடரை ஆஸி. 3-1 என வென்று அசத்தியது.

இந்த நிலையில் விருது விழாவில் பங்கேற்ற மிட்செல் மார்ஷ் கூறியதாவது:

பார்டர் -கவாஸ்கர் தொடரை வென்றது அருமையான விஷயம். நான் இல்லாமல் ஆஸி. வீரர்கள் 10 பேருடன் சிறப்பாக விளையாடினார்கள்.

கடந்த டிசம்பருக்கு முன்பு எனக்கு அதிகமான நேசம் இருந்தது. டிசம்பருக்குப் பிறகு அது வேறு கதையாக மாறியது.

பும்ராவை கோடைக் காலத்தில் எதிர்கொண்டு இலங்கை சென்று ரன்களை குவிப்பதை பார்க்க நன்றாக இருக்கிறது. எனக்கு தேவையான திடல் எதுவென்றால் அது காலே திடல்தான்.

4 வயதாகும் என்னுடைய சகோதரியின் மகன் டெட் உடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். அவனும் ஜஸ்பிரித் பும்ரா பாணியில் ஓடிவந்து பந்து வீசுகிறான். எனக்கு அங்கும் பும்ராவின் கொடுங்கனவு தொடர்ந்தது என்ற கலகலப்பாக பேசினார். இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் எல்லாம் சிரித்தார்கள்.

ரஞ்சி அரையிறுதியில் சதமடித்த முதல் கேரள வீரர்..! வரலாற்று சாதனை!

ரஞ்சி கோப்பை அரையிறுதியில் கேரள அணி வலுவான நிலையில் உள்ளது.ரஞ்சி கோப்பை அரையிறுதியில் கேரளா, குஜ்ராத் அணிகள் மோதுகின்றன. இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடும் கேரள அணி 2ஆம் நாள் முடிவில் 418/7 ரன்கள்... மேலும் பார்க்க

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பாபர் அசாம்தான் சரியான நபர்: முகமது ரிஸ்வான்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பாபர் அசாம்தான் சரியான நபர் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

மெக்காவுக்குச் சென்ற முகமது சிராஜ்..!

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் புனிதப் பயணமாக மெக்காவுக்குச் சென்றுள்ளார். கடந்த இரவு முகமது சிராஜ் சம்சாபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி தேசிய விமான நிலையத்தில் இருந்து மெக்கா புறப்பட்டதாக வி... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியை வெல்வாரா ரோஹித் சர்மா?

இந்தியாவின் கேப்டன்களில் எம்.எஸ்.தோனி மட்டுமே அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளார். இவருக்கு அடுத்து கேப்டனான விராட் கோலி எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. தற்போதைய கேப்டன் ரோஹித் சர... மேலும் பார்க்க

3-வது ஒருநாள்: மூவர் அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 241 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடை... மேலும் பார்க்க

எந்த பந்துவீச்சாளருக்கும் சவாலளிக்கக் கூடியவர் விராட் கோலி: பாக். வீரர்

விராட் கோலி உலகத் தரத்திலான வீரர் எனவும், எந்த பந்துவீச்சாளருக்கும் சவாலளிக்கக் கூடியவர் எனவும் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி ... மேலும் பார்க்க