`அவருடன்தான் வாழ்வேன்’ - கைகொடுக்காத 12 மணிநேர கவுன்சிலிங்; வருங்கால மருமகனுடன் ...
புயல் சின்னம் இன்று வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வியாழக்கிழமை (ஏப்.10) வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி, மத்திய வங்கக் கடலில் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.
கனமழை எச்சரிக்கை: தென் தமிழகத்தையொட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வியாழக்கிழமை (ஏப்.10) முதல் ஏப்.15-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் வியாழக்கிழமை (ஏப்.10) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.10) 97 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
நீலகிரியில் 80 மி.மீ. மழை: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 80 மி.மீ. மழை பதிவானது.
2 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 101.3, சேலத்தில் 100.76 ஃபாரன்ஹீட் பதிவானது. தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.