செய்திகள் :

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்!

post image

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார்.

9 மாத காலமாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வருவதற்காக அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது.

இந்திய நேரப்படி இன்று காலை 10.35 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 வீரர்களுடன் டிராகன் விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டுள்ளது.

நாளை அதிகாலை டிராகன் விண்கலம் பூமிக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - ராகுல் கேள்வி

இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதம் ஒன்றை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார்.

மார்ச் 1 ஆம் தேதி மோடி எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

”இந்திய மக்களின் சார்பாக உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று ஒரு நிகழ்ச்சியில், பிரபல விண்வெளி வீரர் மைக் மாசிமினோவைச் சந்தித்தேன். எங்கள் உரையாடலின்போது, ​​உங்களைப் பற்றியும் உங்கள் பணியைப் பற்றியும் எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்பதைப் பற்றி விவாதித்தோம். இந்த உரையாடலைத் தொடர்ந்து, உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.

நான் அமெரிக்காவுக்கு வருகை தந்தபோது அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் பைடனைச் சந்தித்தபோது, ​​உங்கள் நலம் குறித்து விசாரித்தேன். 140 கோடி இந்தியர்களும் உங்கள் சாதனைகளில் பெருமிதம் கொண்டுள்ளனர்.

நீங்கள் ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் இருந்தாலும், தொடர்ந்து எங்கள் இதயத்துக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் ஆரோக்கியத்துக்காகவும் வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

பூமிக்கு திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்ப்பதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பதற்காக மகிழ்ச்சியுடன் காத்திருக்கும்.

நீங்களும், வில்மோரும் பாதுகாப்பாக திரும்ப வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதம்.

மணிப்பூா் முகாம்களுக்கு மாா்ச் 22 செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 போ் சனிக்கிழமை (மாா்ச் 22) செல்ல உள்ளனா். இதுதொடா்பாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு (என்ஏஎல்எஸ்ஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்: இந்தியா

சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீா் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த லெக்ஸ் ஃபிரிட்மென்னுக்கு பிரதமா் மோடி அண்மையில் அளித்த நோ்காணல... மேலும் பார்க்க

நாகபுரி வன்முறை: 50 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள முகாலய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி அந்த நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. வீடுகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. நாகபுர... மேலும் பார்க்க

குடிமைப் பணிகள் தோ்வு முறைகேடு: பூஜா கேத்கருக்கு எதிராக ஏப்.15 வரை கைது நடவடிக்கை கூடாது -உச்சநீதிமன்றம்

குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு வழக்கில், முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு எதிராக கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ஏப்.15 வரை உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி வாரியான வாக்குப்பதிவு விவரம் பதிவேற்றம் குறித்து ஆலோசிக்கத் தயாா்: தோ்தல் ஆணையம்

மக்களவை, மாநில சட்டப்பேரவை தோ்தல்கள் வாக்குப் பதிவின்போது, வாக்குச்சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடா்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க ... மேலும் பார்க்க

ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளது. ரயில்களின் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் செலுத்தி வரும் கவனம் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது என்று ம... மேலும் பார்க்க