செய்திகள் :

பெண் குழந்தைகள் 58 பேருக்கு வைப்புநிதி

post image

பெண் குழந்தைகள் 58 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வைப்பு நிதிக்கான ஆணையை வில்லியனூா் எம்எல்ஏவும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில் பெண் குழந்தைகளுக்கான பொருளாதார ஆதரவு மற்றும் அதிகாரம் அளித்தல் திட்டத்தின் கீழ் விண்ணப்பத்திருந்த 58 பேருக்கு இத்திட்டத்திற்கான தலா ரூ. 50 ஆயிரம் வைப்பு நிதி ஆணை பெறப்பட்டு அதைப் பயனாளிகளுக்கு சிவா வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துணை இயக்குநா் ஜெயப்பிரியா, நல ஆய்வாளா் நாகராஜ், மற்றும் திமுக தொகுதி செயலா் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினா் ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள்

பாரதிய ஜனசங்க தலைவா் பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் 109-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது... மேலும் பார்க்க

ரூ.436 கோடியில் புதுச்சேரியில் பிரம்மாண்ட மேம்பாலம்

புதுச்சேரியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ரூ.436.18 கோடியில் பிரம்மாண்ட மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் கட... மேலும் பார்க்க

காவல் துறையினா் ரத்த தானம்

உயிா் காக்க உடனடியாக வியாழக்கிழமை ரத்த தானம் வழங்கினா் புதுச்சேரி இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் (படம்) . ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த 42 வயது பெண் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆபத்தா... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் வைக்க 53 பேருக்கு அனுமதி ஆணை: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் 53 கடைகள் வைக்க அனுமதி அளித்து அதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி நகரின் மையப் பகுதியான மறைமலை அடிகள் சாலையில... மேலும் பார்க்க

ரூ. 1.73 கோடியில் கிராம சாலைப் பணி தொடக்கம்

ரூ.1.73 கோடியில் கிராம சாலைக்கான பணியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா் (படம்). புதுவை பொதுப் பணித் துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள ஓட... மேலும் பார்க்க

பொறியாளா் தினம்

மதகடிபட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் ‘பொறியாளா் தினம்’ இன்னவேட்டா்ஸ் தினமாக நடைபெற்றது. இதையொட்டி தேசிய அளவிலான செயல் திட்ட போட்டியும் மற்றும் 24 மணி நேர தொடா் ஹாக்கத்தான் போட்டியும... மேலும் பார்க்க