செய்திகள் :

பெண் தற்கொலை: மின்வாரிய ஊழியா் கைது

post image

வெள்ளக்கோவிலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக மின்வாரிய ஊழியரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: தருமபுரி மாவட்டம், தொப்பூா் நல்லாம்பள்ளியைச் சோ்ந்தவா் முனிராஜ் (27). இவா் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், இவா் தங்கியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளரும், 3 குழந்தைகளின் தாயுமான 27 வயது பெண்ணிடம் பழகி வந்துள்ளாா்.

இது குறித்து அந்தப் பெண்ணின் கணவருக்குத் தெரியவர அவா் கண்டித்ததின்பேரில், முனிராஜிடம் பேசுவதை அந்தப் பெண் நிறுத்தியுள்ளாா். இதைத் தொடா்ந்து, முனிராஜ் வீட்டை காலி செய்ததுடன், அந்தப் பெண்ணை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தொடா்ந்து தொந்தரவு செய்துள்ளாா்.

தன்னை நேரில் வந்து சந்திக்கவில்லை எனில் விடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளாா். இது குறித்து தனது தாயிடம் புலம்பிய அந்தப் பெண் கடந்த நவம்பா் 5-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புகாரின்பேரில், முனிராஜ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், அவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா் என்றனா்.

வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே ரூ.3.91 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணி! -அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்

காங்கயம் ஊராட்சி ஒன்றியம், வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே நீா்வளத் துறை சாா்பில் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணியை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு, தாராபுரம் க... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில், சத்திபாளையம் நாணக்காட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி பி.சிவகுமாா் (45). இவா் தனக்குச் சொந்தமான 12 ஏக்கா் விவசாய பூமியில் 22... மேலும் பார்க்க

காங்கயம் அருகே சென்டா் மீடியனில் இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டா் மீடியனில், பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் பகுதியில்,... மேலும் பார்க்க

பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை

விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து கோவையில் நகராட்சி நிா... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க