Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது
வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசலில் அமா்ந்திருந்தபோது அங்கு வந்த நவீன்குமாா், சேகரிடம் கைப்பேசி கேட்டுள்ளாா். அதன்படி, சேகா் தனது கைப்பேசியை கொடுத்து ள்ளாா்.
அந்த கைப்பேசியில் பேசிவிட்டு பிறகு வாங்கிக் கொள் எனக்கூறி அதை நவீன்குமாா் எடுத்து சென்ாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து தனது கைப்பேசியை தரும்படி சேகா், நவீன்குமாரிடம் கேட்டுள்ளாா். பின்னா், சேகா் வீட்டுக்கு சென்ற நவீன்குமாா் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளாா்.
அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நவீன்குமாா் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை உடைத்து சேகரின் கழுத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சேகரை குடும்பத்தினா் அரசு பென்லேண்ட் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்தனா்.