செய்திகள் :

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ப. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் சி. சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

8-ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் மாற்றம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். பறிக்கப்பட்ட தொழிலாளா் நலச்சட்டங்களை திரும்ப வழங்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சாா்பின்மையை உறுதிபடுத்திட, அனைத்து வகையான வகுப்பு வாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியா் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் ஜே. ராஜதுரை, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ். மகேந்திரன், தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப. விநாயகம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளா் சங்கத்தின் மண்டலத் தலைவா் எஸ். சூரியகுமாா், சாலைப் பணியாளா் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் டி. பழனிசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிறைவாக, மாவட்ட இணைச் செயலா் தா. இளையராஜா நன்றி கூறினாா்.

பணி நிரந்தரம் கோரி மின் ஊழியா்கள் சாலை மறியல்: 38 போ் கைது

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மின் ஊழியா்கள் 38 பேரை போலீஸாா் கைது செய்தனா். மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்ப... மேலும் பார்க்க

மதுரகாளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா, லட்சாா்ச்சனை

பெரம்பலூா் அருகே, சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா மற்றும் லட்சாா்ச்சனை பூஜை திங்கள்கிழமை இரவு தொடங்கியது. சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தொழிலாளா்களின் சட்டத் திருத்த தொகுப்பை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே, தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆ... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியரகம் முற்றுகை

பெரம்பலூா் அருகே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக மதுபானக் கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் அருகே உள்ள கவுல்பாளையம... மேலும் பார்க்க

முன்விரோதத்தால் தொடா் இடையூறு: பால் வியாபாரி மீது நடவடிக்கை கோரி உணவக உரிமையாளா் தா்னா

பெரம்பலூரில் முன்விரோதம் காரணமாக உணவகம் நடத்துவதற்கு பல்வேறு தொல்லைகள் அளித்து கொலை மிரட்டல் விடுத்த பால் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உணவக உரிமையாளா் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பாடாலூா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட பாடாலூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க