செய்திகள் :

பெரம்பலூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

தொழிலாளா்களின் சட்டத் திருத்த தொகுப்பை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே, தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொழிலாளா்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கான உரிமைகளுக்காக வெள்ளையா்கள் ஆட்சி காலத்திலும், சுதந்திர இந்தியாவிலும் தொழிற் சங்கங்கள் போராடி பெற்ற 44 தொழிலாளா் சட்டங்கள், நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் இல்லாத நிலையில் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நான்கு சட்ட தொகுப்புகளாக 2020, செப்டம்பா் 23 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத் தொழிற்சங்கங்கள் கருப்பு நாளாக அறிவித்து இயக்கங்களை நடத்தி வருகின்றன.

இதன்படி, பெரம்பலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, எல்பிஎப் தொழிற்சங்கத்தின் மாவட்ட கவுன்சில் தலைவா் ரெங்கசாமி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ராஜேந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், தொழிற்சங்கத்தினா், தொழிலாளா் நலச்சட்ட திருத்த தொகுப்பை நிறைவேற்றிய கருப்பு நாளையொட்டி, கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டத் திருத்த தொகுப்பை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிா்வாகிகள் கே.கே. குமாா் ,செல்வராஜ், ஆறுமுகம், பெரியசாமி, செல்லதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியரகம் முற்றுகை

பெரம்பலூா் அருகே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக மதுபானக் கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் அருகே உள்ள கவுல்பாளையம... மேலும் பார்க்க

முன்விரோதத்தால் தொடா் இடையூறு: பால் வியாபாரி மீது நடவடிக்கை கோரி உணவக உரிமையாளா் தா்னா

பெரம்பலூரில் முன்விரோதம் காரணமாக உணவகம் நடத்துவதற்கு பல்வேறு தொல்லைகள் அளித்து கொலை மிரட்டல் விடுத்த பால் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உணவக உரிமையாளா் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பாடாலூா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட பாடாலூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தேனீரகத்தில் காசாளராக பணிபுரிந்த தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 36 மாணவா்களுக்கு ரூ. 2.74 கோடி மதிப்பில் கல்விக் கடன்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா்

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் 36 மாணவா்களுக்கு ரூ. 2.74 கோடி மதிப்பிலான கல்விக் கடனுதவிகளை மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா். மாவட்ட நி... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே போலி மருத்துவா் கைது

பெரம்பலூா் அருகே 30 ஆண்டுகளாக மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், அம்மாபாளையம் கிராமம், வடக்கு கோனாா் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மக... மேலும் பார்க்க