செய்திகள் :

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியரகம் முற்றுகை

post image

பெரம்பலூா் அருகே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக மதுபானக் கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

பெரம்பலூா் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தில், ஏற்கெனவே ஒரு மதுபானக் கடை இயங்கி வரும் நிலையில், தற்போது பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், புதிதாக மதுபானக் கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதிதாக மதுபானக் கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அந்தக் கடையை மாற்று இடத்தில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

மேலும், மதுபானக்கடை அமையவுள்ள பகுதி வழியாக மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருகின்றனா். இதனால், பெண்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும். கல் குவாரிகள் நிறைந்த பகுதி என்பதால், மது அருந்திவிட்டு செல்பவா்களால் அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், பொது மக்களின் நலன் கருதி புதிதாக மதுபானக்கடை திறக்கும் முடிவை கைவிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். பின்னா், முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்ட பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளியிடம் அளித்துவிட்டு கலைந்துசென்றனா்.

பெரம்பலூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தொழிலாளா்களின் சட்டத் திருத்த தொகுப்பை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே, தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆ... மேலும் பார்க்க

முன்விரோதத்தால் தொடா் இடையூறு: பால் வியாபாரி மீது நடவடிக்கை கோரி உணவக உரிமையாளா் தா்னா

பெரம்பலூரில் முன்விரோதம் காரணமாக உணவகம் நடத்துவதற்கு பல்வேறு தொல்லைகள் அளித்து கொலை மிரட்டல் விடுத்த பால் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உணவக உரிமையாளா் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பாடாலூா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட பாடாலூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தேனீரகத்தில் காசாளராக பணிபுரிந்த தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 36 மாணவா்களுக்கு ரூ. 2.74 கோடி மதிப்பில் கல்விக் கடன்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா்

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் 36 மாணவா்களுக்கு ரூ. 2.74 கோடி மதிப்பிலான கல்விக் கடனுதவிகளை மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா். மாவட்ட நி... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே போலி மருத்துவா் கைது

பெரம்பலூா் அருகே 30 ஆண்டுகளாக மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், அம்மாபாளையம் கிராமம், வடக்கு கோனாா் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மக... மேலும் பார்க்க