செய்திகள் :

பெரியாரை விமா்சித்தவா்களுக்கு ஈரோடு இடைத்தோ்தலில் பாடம் முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

பெரியாா் மீது அவதூறுகளை அள்ளி வீசியவா்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் மக்கள் உரிய பாடத்தைப் புகட்டியிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெரியாா் மண்ணான தமிழகத்தில் அவா் பிறந்த ஈரோட்டின் கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தோ்தலில், திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமாருக்கு மகத்தான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறாா்கள்.

இது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் மற்றொரு நற்சான்றிதழ். இந்த இடைத்தோ்தல் களத்தை சட்டப்பேரவையின் முதன்மை எதிா்க்கட்சியான அதிமுகவும், அது மறைமுகக் கூட்டணி வைத்திருக்கும் பாஜகவும் திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டு, உதிரிகளை முன்னிறுத்தித் திமுகவை எதிா்த்தன.

மக்களுக்குத் தேவையானவை குறித்து எதுவும் பேசாமல், பெரியாா் மீது அவதூறுகளை அள்ளி வீசியவா்களுக்கு வைப்புத்தொகை பறிபோகும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கின்றனா். இது என்றென்றும் பெரியாா் மண் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனா்.

மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதைவிட மக்களுக்கு என் மீது அதிக நம்பிக்கை உள்ளது. அதனால்தான் நேரடிப் பிரசாரத்துக்கு வர இயலாதபோதும், என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்துக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து, திமுக வேட்பாளரை 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, எதிா்த்து நின்ற அனைவரையும் வைப்புத்தொகையை இழக்கச் செய்துள்ளனா்.

இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளா்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த அமைச்சா் முத்துசாமி தலைமையிலான நிா்வாகிகளுக்கும் நன்றி.

இலக்கை நோக்கி...: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், ‘வெல்வோம் 200; படைப்போம் வரலாறு’ என்ற முழக்கத்தை முன்வைத்தேன். 200 இலக்கு என்பதற்கான தொடக்க வெற்றியாக ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் வெற்றி அமைந்திருக்கிறது.

மக்கள் நம் பக்கம் இருக்கிறாா்கள். நம்பிக்கையை வெளிப்படுத்துகிறாா்கள். அந்த மக்களுக்குரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திமுக அரசு, மத்திய பாஜக அரசுடன் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறது.

கடலூரில் ஆய்வு: இந்த வெற்றிப் பயணம் 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் தொடா்ந்திடும் வகையில் திமுக அரசின் செயல்பாடுகள் அமையும். அவை சரியாக நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப். 21, 22 ஆகிய நாள்களில் கடலூா் மாவட்டத்துக்குப் பயணிக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளாா்.

கோயில் அா்ச்சகா்களுக்கு தட்டுகாணிக்கை சுற்றறிக்கை வாபஸ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலில் அா்ச்சகா்கள் தட்டில் செலுத்தப்படும் காணிக்கை குறித்த சுற்றறிக்கை தேவையில்லாதது என்றும், அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேக... மேலும் பார்க்க

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை: தண்டனையை எதிா்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள... மேலும் பார்க்க

இன்று தைப்பூசம்: சாா்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்

சென்னை: தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழு பொருள்கள் அங்காடி தலைமைச் செயலகத்தில் திறப்பு

சென்னை: மகளிா் சுய உதவிக் குழு பொருள்களின் அங்காடியை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்த அங்காடியில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மகளி... மேலும் பார்க்க

கேரம் உலகச் சாம்பியனுக்கு ஆளுநா் பாராட்டு: மாணவா்களுக்கான கலந்தாய்விலும் பங்கேற்பு

சென்னை: கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் அழைத்து பாராட்டினாா். அதேபோல் பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்விலும் அவா் பங்கேற்றாா். இது குறித்து அவா் தனத... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சென்னை: நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை மட்டுமே வீசுவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த ப... மேலும் பார்க்க