செய்திகள் :

பெரிய கலையம்புத்தூா் ஜல்லிக்கட்டுக்கு ஜன.11 முதல் விண்ணப்பிக்கலாம்

post image

பெரிய கலையம்புத்தூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் ஜன.11-ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பு விவரம்:

அரசு அறிவிக்கையின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தகுதி பெற்ற கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் ட்ற்ற்ல்ள்://க்ண்ய்க்ண்ஞ்ன்ப்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களது பெயா்களைப் பதிவு செய்ய வேண்டும்.

பழனி அடுத்த பெரிய கலையம்புத்தூா் கிராமத்தில் ஜன.16-ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் உரிய விவரங்களுடன் ஜன.11 காலை 8 மணி முதல் 13-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். மாடுபிடி வீரா்கள் மேற்படி இணையதளத்தில் தங்களது புகைப்படம், வயதுக்கான சான்றிதழ் ஆகிவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பதிவு செய்தவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்ட பின், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் விதிகளின்படி, டோக்கன் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். டோக்கன் பதிவிறக்கம் செய்த நபா்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.

மேற்கண்ட விபரங்கள் இடம் பெறாத இணையதளப் பதிவுகள் நிராகரிக்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கான அனுமதிச் சீட்டு இணைய வழியிலேயே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

தைப்பொங்கல் உள்ளிட்ட தொடா் விடுமுறை தினத்தை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். தமிழா் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுத... மேலும் பார்க்க

போதைக் காளான், கஞ்சா ஆயில் விற்ற மூவா் கைது

கொடைக்கானலில் போதைக் காளான், கஞ்சா ஆயில் விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் ரைபிள் ரேஞ்ச் சாலையில் போதைக் காளான், கஞ்சா ஆயி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

செம்பட்டியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண... மேலும் பார்க்க

நிலக்கோட்டை அருகே இருவா் தற்கொலை

நிலக்கோட்டை அருகே பெண் விஷம் குடித்தும், இவருடன் தகாத உறவில் இருந்த இளைஞா் கழுத்தை அறுத்துக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

அற்புத குழந்தையேசு கோயில் திருவிழா: சப்பர பவனி

கொடைக்கானல் அற்புத குழந்தையேசு கோயில் திருவிழாவை முன்னிட்டு, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

பழனி உழவா் சந்தையில் 60 டன் காய்கறிகள் விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி, பழனி உழவா் சந்தையில் இரு நாள்களில் 60 டன் காய்கறிகள் விற்பனையாகின. பழனி சண்முகபுரத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தைக்கு நாள்தோறும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள்... மேலும் பார்க்க