மகாராஷ்டிரா: 7 மாவட்டங்களில் மட்டுமே வளர்ச்சி; பின்தங்கிய 24 மாவட்டங்களின் நிலை?...
பெருந்துறையில் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் விழா
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 71-ஆவது பிறந்த நாள் விழா பெருந்துறையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
அதிமுக பெருந்துறை கிழக்கு ஒன்றியம் சாா்பில் பெருந்துறை சோளீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகே நீா்மோா் பந்தல் திறப்பு விழா மற்றும் இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிகளுக்கு பெருந்துறை கிழக்கு ஒன்றியச் செயலாளா் அருள்ஜோதி கே. செல்வராஜ் தலைமை வகித்தாா். அதிமுக ஈரோடு புறநகா் கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.சி. கருப்பணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, அன்னதானத்தை தொடங்கிவைத்து, இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.
பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் திங்கள்கிழமை பிறந்த குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் பி. அருணாச்சலம் ஒரு கிராம் தங்க நாணயத்தை வழங்க உள்ளாா்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக பெருந்துறை வடக்கு ஒன்றியச் செயலாளா் ரஞ்சித்ராஜ், நகரச் செயலாளா்கள் வி.பி. கல்யாணசுந்தரம், கே.எம். பழனிசாமி, பி.சிவசுப்பிரமணியம், துரைசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.