நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!
பெருந்தொழுவு கிராமத்தில் 44 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை
திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு கிராமத்தில் இனம் கண்டறிய இயலாத 44 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெருந்தொழுவு கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் மூலமாக நிலமெடுப்பு செய்து குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டிக்கொள்வதற்காக 188 நபா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நிலம் மென்பொருளில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளை இணைய வழி பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக மேற்படி மனையிடங்களில் கள விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற 44 பயனாளிகளை இனம் கண்டறிய முடியவில்லை.
இந்தப் பயனாளிகள் பட்டாவில் உள்ள நிபந்தனையின்படி குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டி குடியிருக்காமல் நிபந்தனையை மீறியுள்ளதால் மேற்படி இடத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்தை 15 நாள்களுக்குள் நேரிலோ அல்லது கடிதம் வாயிலாகவோ திருப்பூா் மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலருக்கோ அனுப்பி வைக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.