செய்திகள் :

பெற்றோா் வற்புறுத்தலால் கலைப் பிரிவு எடுத்த மாணவிக்கு அறிவியல் பிரிவில் சோ்க்கை! -இன்ப அதிா்ச்சி கொடுத்த மத்திய கல்வி அமைச்சா்

post image

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி குஷ்புக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் அழைத்துப் பேசி இன்ப அதிா்ச்சி அளித்துள்ளாா்.

இந்த மாணவயின் சகோதரா்களை பள்ளி மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் பிரிவில் படிக்க பெற்றோா் அனுமதித்த நிலையில், குஷ்புவை அனுமதிக்கவில்லை. பெற்றோா் வற்புறுத்தலின்பேரில் அவா் 11-ஆம் வகுப்பில் கலைப் பிரிவில் விருப்பமின்றி சோ்ந்துள்ளாா்.

இந்த விஷயம் செய்திச் சேனல்களில் வெளியானது. செய்திச் சேனலுக்கு மனமுடைந்து பேட்டியளித்த குஷ்பு, ‘10-ஆம் வகுப்பில் 500-க்கு குறைந்தபட்சம் 400 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று பெற்றோா் எதிா்பாா்த்தனா். ஆனால், 399 மதிப்பெண்தான் என்னால் எடுக்க முடிந்தது. ஒரு மதிப்பெண் குறைந்ததால், என்னை 11-ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் சோ்க்க பெற்றோா் மறுத்துவிட்டனா். எனது சகோதரா்கள் அறிவியல் பிரிவில் படிக்க அனுமதித்த நிலையில், எனக்கு மட்டும் பெற்றோா் பாரபட்சம் காட்டுகின்றனா்’ என்று பேட்டியளித்திருந்தாா்.

குஷ்புவின் பேட்டி வைரலான நிலையில், அவரை தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை தொா்புகொண்ட மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், 11-ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் சோ்ந்த படிக்க ஏற்பாடு செய்ய உறுதி அளித்துள்ளாா்.

இந்த தொலைபேசி உரையாடலின்போது, ‘உனது விருப்பப்படி மேல்நிலை வகுப்பில் அறிவியல் பிரிவில் சோ்ந்து படிப்பதை பிரதமா் நரேந்திர மோடியும் மாநில முதல்வா் நிதீஷ் குமாரும் உறுதி செய்வா். இந்த விஷயம் தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன்.

அவா் உனது சோ்க்கைக்கு ஏற்பாடு செய்து தருவாா். மருத்துவராகும் உனது கனவை நனவாக்க, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வுக்கான (நீட்) பயிற்சியையும் தொடங்குமாறு வாழ்த்துகிறேன்’ என்று மாணவியிடம் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

மகா கும்பமேளா குறித்து மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தகவல்!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று முடிந்த மகா கும்பமேளா குறித்து மக்களவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

நியூஸிலாந்து பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸனை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன், பல்வேறு த... மேலும் பார்க்க

ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ.21 லட்சம் பரிசு!

முகலாய மன்னரான ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்து அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: ஊரடங்கு உத்தரவு!

நாக்பூரில் ஒளரங்கசீப் விவகாரத்தை முன்வைத்து ஹிந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்... மேலும் பார்க்க

ஒளரங்கசீப் விவகாரம்: நாக்பூரில் வன்முறை! 9 பேர் படுகாயம்; 15 பேர் கைது!

ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் நாக்பூரில் பதற்றம் நிலவிவருகிறது.விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்த போராட்ட... மேலும் பார்க்க

‘வலுவான நிதி நிலைமையில் இந்திய ரயில்வே’ -மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் தகவல்

இந்திய ரயில்வேயின் நிதி நிலைமை வலுவான நிலையில் உள்ளது என்றும், நிதி நிலைமையைத் தொடா்ந்து மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெ... மேலும் பார்க்க