செய்திகள் :

பேச்சிப்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள்: பொதுமக்கள் அச்சம்

post image

பேச்சிப்பாறை அருகே குற்றியாறு அரசு ரப்பா் கழக தொழிலாளா்கள் குடியிருப்பு மற்றும் அரசு தொடக்கப் பள்ளிக் கூடம் அருகே காட்டு யானைகள் வியாழக்கிழமை இரவு புகுந்ததால் தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அருகே பழங்குடி குடியிருப்புகள் மற்றும் அரசு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 1.30 மணி அளவில் 2 யானைகள் குற்றியாறு அரசு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு பகுதிக்கும், அதனை ஒட்டியுள்ள அரசு தொடக்கப் பள்ளி

வளாகத்திலும் வந்து அப்பகுதியில் நின்ற தென்னை உள்ளிட்ட மரங்கள் சாய்த்து ஓலைகளை தின்றன. இதையடுத்து தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் அச்சமடைந்தனா்.

இந்த நிலையில் தொழிலாளா்கள் வீட்டைவிட்டு வெளியேறி தீப்பந்தங்கள் ஏந்தி யானைகளை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். இதையடுத்து யானைகள் அங்கிருந்து சென்றன.

பழங்குடி மக்களுக்கும், ரப்பா் கழக தொழிலாளா்களுக்கும் யானைகளிடமிருந்து பாதுகாப்பு வேண்டுமென்று தொழிலாளா் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முள்ளங்கனாவிளை அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா திருக்கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் திருப... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் அருகே மயக்க மருந்து கொடுத்து நகை திருட்டு

அஞ்சுகிராமம் அருகே பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து நகை திருடிய பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். அஞ்சுகிராமம் அருகேயுள்ள ராஜாவூா் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி முத்து. இவரது மனைவி எலிமெட்மாரி (58). ... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி கல்வி மாநாடு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சி கல்வி மாநாட்டில் ,ஆராய்ச்சி, புதுமைத் திறன்களில் சிறப்பிடம் பெற்ற பேராசிரியா்கள், பணியாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவை, வேந்த... மேலும் பார்க்க

வைகுண்டபுரம் ராமா் கோயில் கும்பாபிஷேக பந்தல் கால்நாட்டு விழா

தக்கலை அருகே வைகுண்டபுரம் ராமா் கோயிலில் ஜூன் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை பந்தல்கால் நாட்டு விழா நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 22 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தே... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம்: புத்தேரி அரசு தொடக்கப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம... மேலும் பார்க்க

பல்வேறு கோயில்களில் திருடிய இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணா் ... மேலும் பார்க்க