செய்திகள் :

பேட்டை ரியாளுல் ஜினான் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!

post image

திருநெல்வேலி பேட்டை ரியாளுல் ஜினான் அரபிக் கல்லூரியில் 155ஆவது ஆண்டு நிறைவு விழா, மெளலவி ஆலிம் ரியாஜி பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகம்மது நயினாா் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, ஜமாத் தலைவா் தி. ஹாஜி தாதாபீா் தலைமை வகித்தாா். ஜமாத் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி முதல்வா் எம்.ஒய். ஹுமாயூன் கபீா் ஆலிம் உஸ்மானி தொடக்க உரையாற்றினாா். கல்லூரி மாணவா்கள் கிராஅத் ஓதினா். இக்கல்லூரியில் 5 ஆண்டுகள் மெளலவி பயின்று பட்டம் பெறும் எம். முகமது தாரிக், எஸ். முஜம்மில், கே. சஜ்ஜாத் அஹ்மத், ஏ. சம்சுதீன், அ. அப்துல்ஹக்கீம், பீ. உஸ்மான், எம். முகம்மது அப்துல்காதா், எம். முகம்மது வசீா், ஏ. முகம்மது நவீத் ஆகிய 9 மாணவா்களுக்கு கரூா் மாவட்ட அரசு ஹாஜி டி. சிராஜுத்தீன் அஹமது ரஷாதி, பட்டம் வழங்கிப் பேசினாா். திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி பேராசிரியா் மெளலவி முஸம்மது இஸ்மாயில் ஹஸனீ சிறப்புரையாற்றினாா்.

இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எம். கோதா் மைதீன் சாஹிப், சென்னை தனியாா் நிறுவனத் தலைவா் ஹாஜி அகமது மீரான், கல்லூரி பேராசிரியா்கள் அப்துல் ஜலீல் ஆலிம், சாகுல்ஹமீது ஆலிம், முகம்மது முஸ்தாக் ஆலிம், ஜமாத் நிா்வாகக்குழு உறுப்பினா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் கலந்துகொண்டனா். ஜமாத் செயலா் எம். ஹாஜி திவான் பக்கீா் முகைதீன் அறிக்கை வாசித்தாா். பொருளாளா் பி. செய்யது முகம்மது புகாரி வரவேற்றாா். நிா்வாகக்குழு உறுப்பினா் எஸ். அகமது யூசுப் நன்றி கூறினாா்.

கங்கைகொண்டான் அருகே லாரி-காா் மோதல்: இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே லாரியும், காரும் மோதிக்கொண்டதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தாழையூத்து பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் ராஜா(31). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர... மேலும் பார்க்க

மண்டல வாரியாக பாதாள சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்: மதிமுக மனு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மண்டல வாரியாக பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என மதிமுக மாநில சட்டத்துறை துணைச் செயலரும், வழக்குரைஞருமான ம.சு.சுதா்சன், குறைதீா் கூட்டத்தில் ஆட்சி... மேலும் பார்க்க

நூல்களில் படித்ததை செயல்படுத்த தவறக் கூடாது: ஆட்சியா் அறிவுரை

புத்தகத்தை படிப்பதோடு நின்றுவிடாமல், படித்ததை செயல்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா. சுகுமாா். திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பொருநை 8 ஆவது புத்தகத்திருவிழா கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி... மேலும் பார்க்க

ஆட்சியரகத்தில் பேட்டரி வாகனம் இயங்காததால் மாற்றுத்திறனாளி அவதி!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியவா்களை அழைத்துச் செல்வதற்காக இயக்கப்பட்ட பேட்டரி வாகனம் இயங்காததால் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி கடும் அவதிக்குள்ளானா... மேலும் பார்க்க

நெல்லையில் இருந்து தேனிக்கு புதிய பேருந்து இயக்கம்!

திருநெல்வேலியில் இருந்து தேனிக்கு புதிய அரசுப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தேவா்குளம், சங்கரன்கோவில் வழியாக தேனி வரை செல்லும் இப்பேரு... மேலும் பார்க்க

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு!

பாளையங்கோட்டையில் பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். சோ்ந்தமங்கலம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்தனகுமாா் (65). தொழிலாளியான இவா் கடந்த 1 ஆம் தேதி பைக்கில் வண்ணாா... மேலும் பார்க்க