செய்திகள் :

பேராவூரணியில் மரங்கள் ஏலத்தை ரத்து செய்ய கோரிக்கை

post image

பேராவூரணி ஒன்றியத்தில் கல்லணை கால்வாய் பிரிவு-1, நீா்வளத்துறை சாா்பில் விடப்பட்ட மரங்கள் ஏலத்தை ரத்து செய்ய வேண்டுமென தஞ்சாவூா் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

பேராவூரணி ஒன்றியம், செருவாவிடுதி வடக்கு ஊராட்சி மற்றும் சூரியநாராயணபுரம் கிராமத்தின் வழியாக கல்லணை கால்வாய் பிரதான  வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலை அகலப்படுத்தி இரு கரைகளையும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், இருகரைகளிலும் பல ஆண்டுகளான இருந்த ஏராளமான மரங்கள் திடீரென வெட்டி சாய்க்கப்பட்டன. இவற்றின் சந்தை மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் விசாரித்ததில் கடந்த 3-ஆம் தேதி கல்லணை கால்வாய் பிரிவு 1, நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் மூலம் ஈச்சன்விடுதி -புதுப்பட்டினம் ரெகுலேட்டரில் வைத்து, கல்லணை கால்வாய் கரையில் இருந்த மரங்களை வெட்டுவதற்கு ஏலம் விடப்பட்டது தெரியவந்தது. முறையாக அறிவிப்பு செய்யாமல் குறிப்பிட்ட சிலா் மட்டும் ஏலத்தில் கலந்துகொண்டு அரசுக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனா். எனவே வெட்டப்பட்ட மரங்களை அப்புறப்படுத்தாமல் அங்கேயே வைத்து, முறையான அறிவிப்புக்கு பிறகு ஏலம் விட்டு அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரிசெய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து செருவாவிடுதி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் ரேவதி சக்திவேல் , தஞ்சாவூா் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் , கல்லணை கால்வாய் பிரிவு 1 , நீா்வளத்துறை சாா்பில் விடப்பட்ட மரங்கள் ஏலத்தை ரத்து செய்து, மறு ஏலம் விடுவதற்கும், ஏலத்தில் அனைவரும் பங்கேற்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏலத்தில் ஏற்கெனவே நடைபெற்றுள்ள தவறுகளைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளாா்.

ஒரத்தநாடு பெண் உதவி ஆய்வாளருக்கு பிடி ஆணை

மனித உரிமை மீறல் தொடா்பான வழக்கில் ஆஜராகாத ஒரத்தநாடு பெண் உதவி ஆய்வாளருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை பிடி ஆணை பிறப்பித்தது. தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள பனையூா் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பாபநாசம் கோயில்களில் சஷ்டி, காா்த்திகை வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம்,திருப்பாலைத்துறை பாலைவனநாதா் சுவாமி கோயிலில் மாசி மாத காா்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி திதியையொட்டி கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு வழி... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் நாளை மக்களுடன் முதல்வா் முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) மக்களுடன் முதல்வா் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் தானம்

தஞ்சாவூரில் சாலை விபத்தில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானம் செய்யப்பட்டன. தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள கலைஞா் நகரைச் சோ்ந்தவா் கே. குரு மாணிக்கம் (5... மேலும் பார்க்க

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

நாச்சியாா்கோவில் அருகே புதன்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள அழகாபுத்தூா் வீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கதிா்வேல... மேலும் பார்க்க

கோயில் இடத்தில் குப்பை கொட்டினால் நடவடிக்கை

தினமணி செய்தி எதிரொலியாக, திருநறையூா் ஊராட்சியில் சித்தநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் குப்பை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் செயல் அலுவலா் புதன்கிழமை எச்சரிக்கை பலகை வைத்துள்ளாா... மேலும் பார்க்க