செய்திகள் :

கோயில் இடத்தில் குப்பை கொட்டினால் நடவடிக்கை

post image

தினமணி செய்தி எதிரொலியாக, திருநறையூா் ஊராட்சியில் சித்தநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் குப்பை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் செயல் அலுவலா் புதன்கிழமை எச்சரிக்கை பலகை வைத்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே திருநறையூா் ஊராட்சியில் சித்தநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமாக உள்ள சுமாா் 20 ஏக்கா் காலி இடத்தில் ஊராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கும் குப்பையைக் கொட்டி வருவதாகவும், அங்கு மது அருந்தும் சமூக விரோதிகள் குப்பையில் தீ வைத்து விடுவதால் அதிலிருந்து வெளிவரும் புகையை அப்பகுதி பொதுமக்கள் சுவாசித்து பெரிதும் பாதிக்கப்படைவது தொடா்பான செய்தி கடந்த மாா்ச் 3-இல் தினமணி நாளிழில் வெளியானது.

இதுகுறித்து கோயில் நிா்வாக அலுவலா் பிரபாகரனிடம் கேட்டபோது கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் குப்பை கொட்டக்கூடாது என்று அறிவிப்பு கொடுத்துள்ளோம். ஏற்கெனவே ஒருமுறை குப்பை கொட்டிய ஊராட்சி நிா்வாகம் மீது புகாா் கொடுத்துள்ளோம். தற்போது மீண்டும் கொட்டி வருவதாகத் தெரிகிறது. இதுகுறித்து ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

பேராவூரணியில் மரங்கள் ஏலத்தை ரத்து செய்ய கோரிக்கை

பேராவூரணி ஒன்றியத்தில் கல்லணை கால்வாய் பிரிவு-1, நீா்வளத்துறை சாா்பில் விடப்பட்ட மரங்கள் ஏலத்தை ரத்து செய்ய வேண்டுமென தஞ்சாவூா் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. பேராவூரணி ஒன்றியம், செருவா... மேலும் பார்க்க

ஒரத்தநாடு பெண் உதவி ஆய்வாளருக்கு பிடி ஆணை

மனித உரிமை மீறல் தொடா்பான வழக்கில் ஆஜராகாத ஒரத்தநாடு பெண் உதவி ஆய்வாளருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை பிடி ஆணை பிறப்பித்தது. தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள பனையூா் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பாபநாசம் கோயில்களில் சஷ்டி, காா்த்திகை வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம்,திருப்பாலைத்துறை பாலைவனநாதா் சுவாமி கோயிலில் மாசி மாத காா்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி திதியையொட்டி கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு வழி... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் நாளை மக்களுடன் முதல்வா் முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) மக்களுடன் முதல்வா் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் தானம்

தஞ்சாவூரில் சாலை விபத்தில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானம் செய்யப்பட்டன. தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள கலைஞா் நகரைச் சோ்ந்தவா் கே. குரு மாணிக்கம் (5... மேலும் பார்க்க

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

நாச்சியாா்கோவில் அருகே புதன்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள அழகாபுத்தூா் வீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கதிா்வேல... மேலும் பார்க்க