செய்திகள் :

பேராவூரணி அரசுப் பள்ளி மாணவிக்கு எம்.பி. உதவி

post image

வறுமையில் வாடும்  தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் சித்துக்காடு கிராமத்தை சோ்ந்த அரசுப் பள்ளி  மாணவிக்கு தஞ்சை மக்களவை உறுப்பினா் முரசொலி வெள்ளிக்கிழமை உதவி வழங்கினாா்.

அரசு உயா் நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் சித்துக்காடு கிராமத்தைச் சோ்ந்த நித்திய ஸ்ரீ என்ற மாணவி தனது தாய் இறந்த நிலையில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தை ரெங்கசாமி 100 நாள் வேலைக்குச் சென்று கிடைக்கும் வருவாயில், இரவில் சமைத்து தரும் உணவை உண்பதாகவும், மறுநாள் மதியம்  தானும், தனது தம்பியும்  பள்ளியில் மதிய உணவு சாப்பிடுவதாகவும், சிறு குடிசையில் விளக்கு வெளிச்சத்தில் படிப்பதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தாா்.

இதையறிந்த தஞ்சை மக்களவை உறுப்பினா் முரசொலி  அந்த மாணவியின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று விவரங்களை கேட்டறிந்து, மாணவியின் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கி, விரைவில் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கவும், மாணவியின் உயா்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளைச்  செய்வதாகவும் உறுதியளித்தாா்.  அதற்கு மாணவி நன்றி தெரிவித்தாா்.

நிகழ்வில் பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலா் க. அன்பழகன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் இலக்கியா நெப்போலியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.81 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.81 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 179 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்... மேலும் பார்க்க

ரௌடி கொலை வழக்கில் 7 போ் கைது

தஞ்சாவூா் அருகே அருகே ரௌடி கொலை செய்யப்பட்டது தொடா்பாக 7 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் பி. குறுந்தையன் (50). காவல் துறையின் ரௌடி பட்டியலில... மேலும் பார்க்க

தென்னகப் பண்பாட்டு மைய அலுவலா்களுக்கு பாராட்டு

தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மைய அலுவலா்களை நாட்டுப்புற மற்றும் நாடக கலைஞா்கள் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பாராட்டினா். உத்தர பிரதேச மாநிலம் காசியில் தொடா்ந்து 3 ஆம் ஆண்டாக தமிழ்ச் சங்கம விழா பிப்ரவரி... மேலும் பார்க்க

மனித வளத்தை மேம்படுத்தும் பட்ஜெட்: ‘சாஸ்த்ரா’ பல்கலை. துணைவேந்தா்

தமிழக அரசின் பட்ஜெட்டில் உயா் கல்விக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மனித வளத்தை மேம்படுத்தும் என்றாா் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம். இதுகுறித்த... மேலும் பார்க்க

வரவேற்பும் ஏமாற்றமும் கலந்த தமிழக பட்ஜெட்!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வரவேற்பும், ஏமாற்றமும் கலந்த பட்ஜெட்டாக உள்ளது என பல்வேறு தரப்பினா் கருத்து தெரிவித்துள்ளனா். பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரி பொருளாதாரத் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரிய... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

சுமை தூக்கும் தொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. கும்பகோணம் தாராசுரம் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்நாதன் (29). தா... மேலும் பார்க்க