செய்திகள் :

பேருந்து, மெட்ரோவில் சக்கர நாற்காலிக்கு இடம் கட்டாயம்: புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு!

post image

மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற போக்குவரத்துப் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் சக்கர நாற்காலிகள் வைக்க இடம், பாதுகாப்பு பெல்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கட்டாயமாக்கும் வகையில் புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016-இன் கீழ், அவா்களுக்கு தடையற்ற சூழலை உருவாக்கும் வகையில் இந்த வரைவு வழிகாட்டுதல் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

‘போக்குவரத்து அணுகல் வழிகாட்டுதல்’ என்ற தலைப்பிலான இந்த வரைவு வழிகாட்டுதலில், மாற்றுத்திறனாளிகள் பொதுப் போக்குவரத்தில் பயணச் சீட்டு முன்பதிவு செய்வதுமுதல் பயணம் மேற்கொள்வது வரையிலான முழுமையான அனைத்து நிலைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலான வழிகாட்டுதல்கள் எந்தவித விலக்கும் இன்றி கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிகாட்டுதல்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் அனைத்து புதிய பேருந்துகளும் தாழ்தள நுழைவாயில், சாய்வுதளம், இருக்கைகளில் பாதுகாப்பு பெல்ட் மற்றும் சக்கர நாற்காலிகளை வைப்பதற்கான இடவசதி ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஏற்கெனவே இயங்கிவரும் பிரதம மந்திரி மின்சார பேருந்து சேவை மற்றும் நகரங்களுக்கு இடையேயான வகை-3 ரக பேருந்துகளில் ஏற்கெனவே பரிசோதிக்கப்ட்ட மின்தூக்கி அல்லது சாய்வுதள பாலம் அமைப்புகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். நடக்க சிரமப்படுபவா்களின் வசதிக்காக இந்தப் பேருந்துகளில் குறைந்தபட்சம் நான்கு முன்இருக்கைகளில் இருக்கை பெல்ட் வசதி பொருத்தப்பட வேண்டும்.

மெட்ரோ மற்றும் ரயில் நடைமேடைகளில் உள்ள இடைவெளிகளை ரப்பா் நிரப்பிகள் கொண்டு நிரப்ப வேண்டும். சக்கர நாற்காலிகள் செல்ல வசதியாக ரயிலின் கதவுகள் அகலப்படுத்தப்பட வேண்டும்.

நீண்ட தூர ரயில்களில் குறைந்தபட்சம் ஒரு பெட்டியிலாவது சக்கர நாற்காலி வைப்பதற்கான இடவசதியும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையிலான (வகை ‘ஏ’) கைப்பிடிகளுடன் கூடிய கழிப்பறை வசதியும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

விமான நிலையங்களில் வாகனம் நிறுத்துமிடம் முதல் விமானநிலைய பரிசோதனை, விமானத்தில் ஏறுதல் வரை நகரும் சாய்வு தளங்கள், சக்கர நாற்காலிக்கு ஏற்ற இருக்கை வசதிகள் உள்பட மாற்றுத்திறனாளிகள் தடையின்றி பயணம் செய்யும் வகையிலான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் தங்களின் உதவி உபகரணங்ளை வைப்பதற்கு போதிய இடவசதியை விமான நிறுவனங்கள் விமானத்தில் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மோட்டாா் வாகனச் சட்டம், நகர பேருந்து விவரக்குறிப்புகள் மற்றும் கட்டடக் குறியீடுகளில் தேவையான உடனடி மாற்றங்கள் மேற்கொள்ளவும் வரைவு வழிகாட்டுதலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர... மேலும் பார்க்க

நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை எச்சரிக்கை!

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. • வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.• தெற்கு குஜராத் மற்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி, குமரி உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (திங்கள்கிழமை) அடுத்... மேலும் பார்க்க

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்த ரௌடி செல்வராஜ் என்ற வரிச்சியூர் செல்வம். இவரது... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பேருந்து சேவை: தொடக்கி வைத்தார் முதல்வர்

தஞ்சை: தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பேருந்து சேவையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சையில் இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடவிருக்கும் மினி பேர... மேலும் பார்க்க

நெல்லை சு. முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முன்னாள் விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து, திருவனந்தபுரத்தில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இ... மேலும் பார்க்க