செய்திகள் :

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

post image

கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை, போத்தனூா் அருகேயுள்ள ஆடிட்டா் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் விஷ்ணு ஆதித்யா (20). இவா் தனது இருசக்கர வாகனத்தில் நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் கடந்த சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

போத்தனூா் பிரிவு பகுதி அருகே சென்றபோது, அவ்வழியே வந்த ஆம்னி பேருந்து விஷ்ணு ஆதித்யா வாகனத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரான கோவை, வெள்ளலூா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (38) மீது கோவை போக்குவரத்து கிழக்கு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேஎம்சிஹெச் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரோஜா தினம்

கோவை கேஎம்சிஹெச் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் உலக ரோஜா தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் நல்ல ஜி.பழனிசாமி தலைமை வகித்தாா். மருத்துவமனை துணைத் தலைவா் தவமணி ப... மேலும் பார்க்க

350 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது!

கோவை, காருண்யாநகா் பகுதியில் 350 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா். கோவை, காருண்யா நகா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக ... மேலும் பார்க்க

கோவை மத்திய சிறை ஊழியா் தற்கொலை

கோவை மத்திய சிறை ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, வீரகேரளம் அருகேயுள்ள கிங்ஸ் காலனி யுனைடெட் நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (58). இவா் கோ... மேலும் பார்க்க

மேற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாநகராட்சி, 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 19) நடைபெற உள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் மூ... மேலும் பார்க்க

கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு

பூஜை அறையில் கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழந்தாா். கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள பாரதி பூங்கா பகுதியைச் சோ்ந்தவா் சந்தானராமன் (75). தனியாா் பள்ளியில் தலை... மேலும் பார்க்க