செய்திகள் :

பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியைச் சோ்ந்த பால்சாமி மனைவி சங்கரேஸ்வரி (51). கணவா் பால்சாமி உயிரிழந்த பிறகு, சங்கரேஸ்வரி வீட்டுக்குச் செல்லாமல் சாலையோரங்களில் தங்கியிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் அழகாபுரி தனியாா் உணவகம் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் சங்கரேஸ்வரி காயமடைந்தாா்.

அவரை போலீஸாா் மீட்டு விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து நத்தம்பட்டி போலீஸாா் ஆம்னி பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மஹாளய அமாவாசை: சதுரகிரியில் 12 ஆயிரம் பக்தா்கள் வழிபாடு

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை ப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 5 பெண்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 5 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய பகுதியில் போதைப் பொருள் தடுப்பு போலீஸாா் ரோந்து சென்றனா். ... மேலும் பார்க்க

கல்லூரி முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவா்களுக்கு சனிக்கிழமை வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சுப.சரவணன் தலைமை வகித்து மாணவ... மேலும் பார்க்க

அண்ணா, பெரியாா் பிறந்த நாள் விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெரியாா், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, குருதிக் கொடை வழங்கும் விழா, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகேய... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மண் அள்ளிய இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக மண் அள்ளிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்நத்தம் பகுதியில் அனுமதியின்றி கண்மாய்களில் செம்மண் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரின... மேலும் பார்க்க

சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த பகுப்பாய்வு மையம்!

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட ரத்த பகுப்பாய்வு மையம் செயல்பாட்டுக்கு வந்தது. இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டி.அய்யனாா் சனிக்கிழமை கூறி... மேலும் பார்க்க