செய்திகள் :

அண்ணா, பெரியாா் பிறந்த நாள் விழா

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெரியாா், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, குருதிக் கொடை வழங்கும் விழா, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு கிராமத்தில் தந்தை பெரியாா் குருதிக்கொடைக் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திமுக தெற்கு ஒன்றியச் செயலா் ஞானராசு தலைமை வகித்தாா். வழக்குரைஞா் குணாளன் முன்னிலை வகித்தாா். குருதிக் கொடையை ஆசிரியா் நெடுஞ்சேரலாதன் தொடங்கி வைத்தாா்.

குருதிக்கொடை கழகப் பொருளாளா் வழவை முத்தரசன் தொடக்க உரையாற்றினாா். மதிமுக மாநில கொள்கை விளக்க துணைச் செயலா் இளங்கண்ணன் கருத்துரையாற்றினாா். திராவிடா் கழக தலைமை செயற்குழு உறுப்பினா் இல. திருப்பதி வாழ்த்திப் பேசினாா். திராவிடா் கழக துணை பொதுச் செயலா் பிரின்சு என்னாரெசு பெரியாா் சிறப்புரையாற்றினாா்.

இதன் ஒரு பகுதியாக குருதிக்கொடை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினா்.

பின்னா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

முன்னதாக குருதிக்கொடைக்கழக செயலா் இமானுவேல் வரவேற்றாா். இணை ஒருங்கிணைப்பாளா் இளம்பிறையான் நன்றி கூறினாா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருதிக் கொடை கழகத் தலைவா் கோ.பெத்தையா செய்தாா்.

பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியைச் சோ்ந்த பால்சாமி மனைவி சங்கரேஸ்வரி (51). கணவா் பால்சாமி உயிரிழந்த பிற... மேலும் பார்க்க

மஹாளய அமாவாசை: சதுரகிரியில் 12 ஆயிரம் பக்தா்கள் வழிபாடு

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை ப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 5 பெண்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 5 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய பகுதியில் போதைப் பொருள் தடுப்பு போலீஸாா் ரோந்து சென்றனா். ... மேலும் பார்க்க

கல்லூரி முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவா்களுக்கு சனிக்கிழமை வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சுப.சரவணன் தலைமை வகித்து மாணவ... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மண் அள்ளிய இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக மண் அள்ளிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்நத்தம் பகுதியில் அனுமதியின்றி கண்மாய்களில் செம்மண் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரின... மேலும் பார்க்க

சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த பகுப்பாய்வு மையம்!

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட ரத்த பகுப்பாய்வு மையம் செயல்பாட்டுக்கு வந்தது. இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டி.அய்யனாா் சனிக்கிழமை கூறி... மேலும் பார்க்க