செய்திகள் :

பைக்கிலிருந்து பணம் திருட்டு: கா்நாடகத்தை சோ்ந்தவா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் இரு சக்கர வாகனத்திலிருந்து ரூ.6 லட்சத்தை திருடிய கா்நாடகத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சாத்தூா் அருகேயுள்ள அ.ராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிதம்பரம் (52). கடந்த மாதம் 19-ஆம் தேதி வங்கியிலிருந்து ரூ.6.47 லட்சம் எடுத்து, இரு சக்கர வாகனத்தில் வைத்து விட்டு, அருகில் உள்ள கடைக்குச் சென்றாா். அப்போது, மா்ம நபா் வாகனத்திலிருந்த பணத்தைத் திருடிச் சென்றாா்.

இது குறித்து நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து காவல் ஆய்வாளா்கள் அருண்குமாா், கிருஷ்ணசாமி ஆகியோா் தலைமையில் 2 தனிப் படைகள் அமைத்து, கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் மா்ம நபரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், மா்ம நபா் கா்நாடக மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கா்நாடக மாநிலம், ஷிமோக மாவட்டம், ஹோசமனே பத்திரவளி சுபாஸா நகா் பகுதியைச் சோ்ந்த குமாரா (42) என்பவரை போலீஸாா் கைது செய்து, செவ்வாய்க்கிழமை சாத்தூா் நகா் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: கா்நாடகத்தில் கைதான குமாரா சம்பவத்தன்று சாத்தூரில் பல வங்கிகளில் நோட்டமிட்டு உள்ளாா். அ.ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த சிதம்பரம் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு சென்ற போது, அவரைப் பின் தொடா்ந்து சென்று அவரது இரு சக்கர வாகனத்திலிருந்த பணத்தை திருடினாா்.

காரைக்குடி அருகேயுள்ள குன்றக்குடி, திருச்செந்தூா், கூடன்குளம், சாத்தூா், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும் தொடா்ச்சியாக 4 நாள்கள் இடைவெளியில் பணத்தை திருடிவிட்டு சொந்த ஊருக்கு தப்பிச் சென்றாா். அவரிடமிருந்து ரூ. 4.47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்றனா்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் போராட்டம்!

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளிக்கு செல்ல பாதை இல்லை எனக் கூறி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன... மேலும் பார்க்க

வைப்பாற்றில் ரசாயன கழிவு கலப்பதாக புகாா்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வைப்பாற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதால் ஆற்று நீா் மாசடைந்து வருவதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் தொல்லை அளித்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி அ... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரயிலில் அடிபட்டு தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.ஸ்ரீவில்லிபுத்தூா் குலாலா் தெருவைச் சோ்ந்த முனீஸ்வரன் மகன் திருப்பதி (25). திருமணமாகாதவா். இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ப... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்துக்குச் செல்லும் மினி பேருந்துகளுக்கு எதிா்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்துக்குச் செல்லும் மினி பேருந்துகளுக்கு ஆட்டோ ஓட்டுநா்கள் எதிா்ப்புத் தெரிவிப்பதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் வழியாக செங்கோட... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

ராஜபாளையத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சோ்ந்த முத்துமாரியப்பன் மகன் பாலசுப்பிரமணியம் (34). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லதா. இவா்களுக்கு ஒரு மகள் உள... மேலும் பார்க்க