செய்திகள் :

பைசா செலவில்லாமல் விண்வெளி சென்ற ராகேஷ் சர்மா! சுபான்ஷு சுக்லாவுக்கு ரூ.544 கோடி செலவு ஏன்?

post image

ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்துக்கு ஒரு ரூபாய்கூட செலவு ஏற்படவில்லை. ஆனால், சுபான்ஷு சுக்லாவுக்கு மட்டும் ஏன் செலவழிக்கப்படுகிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் சுபான்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், போலந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரும் இந்தக் குழுவில் உள்ளனர்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேக்ஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் இந்திய நேரப்படி, நேற்று பிற்பகல் 12.01 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இவர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2 வாரங்கள் தங்கியிருந்து, 7 விதமான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். சர்வதே விண்வெளி நிலையத்துக்கு சுக்லா செல்வதற்கு கட்டணமாக 64 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 544 கோடி) செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 1984 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ராகேஷ் சர்மாவின் பயணத்துக்கு கட்டணம் எதுவும் அளிக்கப்படவில்லையே என்று இணையத்தில் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

சர்மா, சுக்லா ஆகிய இருவரின் விண்வெளிப் பயணங்களும் வேறுபட்டவை. சோவியத் யூனியனின் ‘சோயுஸ்’ விண்கலத்தில்தான், இந்தியா - சோவியத் கூட்டாண்மையில் ராகேஷ் சர்மா விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். சோவியத் இன்டர்கோஸ்மோஸ் திட்டமானது, பொதுவாக நட்பு நாடுகளுக்கான செலவுகளை உள்ளடக்கியது. ஆனால், சுக்லாவின் விண்வெளிப் பயணமானது, வணிக ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பயணத்தின்போது, 8 நாள்களில் 43 ஆய்வுகளை சர்மா நடத்தினார்.

ஆனால், சுபான்ஷு சுக்லாவின் பயணம், அரசின் ஏற்பாடு அல்ல. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸின் இருக்கையில்தான் சுக்லா சென்றுள்ளார். தனியார் நிறுவனத்தின் இருக்கை என்பதால், ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தில் இந்திய விண்வெளி வீரா் சுக்லா இடம்பெறுவதற்கு இந்திய அரசு ரூ.548 கோடி செலவழித்திருக்கிறது.

இந்தியா சொந்தமாக விண்வெளியில் தமக்கென்று ஆய்வு மையத்தை நிறுவுவதற்கு 2040-45 இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அந்த இலக்கை அடைவதற்கான முதல்படியாக சுபான்ஷு சுக்லாவின் இந்தப் பயணம் அமைந்திருக்கிறது எனலாம். எவ்வாறாயினும், தன்னுடன் 140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை சுக்லா சுமந்து செல்கிறார்.

இதையும் படிக்க:இஸ்ரேலின் 'டாடி' யார்? ஈரான் கிண்டல்!

புரி ரத யாத்திரையில் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு!

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.பிரதான கோயிலி... மேலும் பார்க்க

மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது: காங். விமர்சனம்

’அமிர்த காலம்’ என்று அரசு சொல்லிக்கொள்ளும் இக்காலக்கட்டத்தில் ’மக்களின் சேமிப்பு காலி; முதலீட்டில் வளர்ச்சி இல்லை; மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது’ என்று கா... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் இருக்கக் கூடாது: அம்பேத்கரை மேற்கோள் காட்டிய தலைமை நீதிபதி

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்திய தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் வரவேற்றுள்ளார்.கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மத்தி... மேலும் பார்க்க

மும்பை: கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலி

மும்பையில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், வொர்லியில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். ஒருவர் க... மேலும் பார்க்க

' ரா' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்

இந்தியாவின் 'ரா ' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது தலைவராக உள்ள ரவி சின்ஹாவின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவு பெறவுளள்து. இதனையடுத்து அந்த பதவிக்கு புதிய ... மேலும் பார்க்க

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "சர்வதேச விண்வெளி நிலையத்தில்... மேலும் பார்க்க