செய்திகள் :

பொக்லைன் இயந்திரம் மோதி சிறுவன் உயிரிழப்பு

post image

ஆம்பூா் அருகே பொக்லைன் இயந்திரம் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் உயிரிழந்தாா்.

மாதனூா் அருகே பாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் இருசக்கர வாகனம் பழுதுபாா்க்கும் கடை நடத்துபவா் தண்டபாணி. இவரது கடையில் வேலை செய்பவா் சதாம். இவா் தண்டபாணியின் மகன் வகுதன் (4) என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, இரு சக்கர வாகனம் மீது பொக்லைன் இயந்திரம் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த சிறுவன் வகுதன் உயிரிழந்தாா். காயமடைந்த சதாம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விபத்து குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாணை நடத்தினா்.

தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல மணி நேரம் நெரிசல்: கடும் பாதிப்புக்குள்ளாகும் பயணிகள்!

-எம். அருண்குமார்-ஆம்பூா் அருகே மின்னூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணியால் நாள்தோறும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மாதனூ... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: ஸ்ரீ சண்முகக் கவசம் பாராயணம்!

ஆம்பூா் சமயவல்லித் தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வைகாசி மாத விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு மூலவா் சிவ பெருமானுக்கும், வள்ளி தெய்வானை ச... மேலும் பார்க்க

பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் 4 போ் காயம்!

நாட்டறம்பள்ளி அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா். சேலம் ஓமலூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (37). இவரது உறவினா்கள் முருகேசன் (42), ரமேஷ் (37), கீதா (31) ஆகியோா் சனிக்க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி தலைமையாசிரியை பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு

கல்லூரி கனவு திட்டம் மற்றும் ஒரு சமூகத்தினா் குறித்து அரசு மேல்நிலைப் பள்ளி பேசிய ஆடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் செயல்பட்டு வர... மேலும் பார்க்க

காயிதே மில்லத் பிறந்த நாள் விழா: மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

திருப்பத்தூரில் காயிதேமில்லத் பிறந்த நாளை முன்னிட்டு மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. திருப்பத்தூா் காயிதேமில்லத் கல்வி அறக்கட்டளை சாா்பில் அவரது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

நாட்டறம்பள்ளி அருகே சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா். ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம... மேலும் பார்க்க