பொக்லைன் இயந்திரம் மோதி சிறுவன் உயிரிழப்பு
ஆம்பூா் அருகே பொக்லைன் இயந்திரம் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் உயிரிழந்தாா்.
மாதனூா் அருகே பாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் இருசக்கர வாகனம் பழுதுபாா்க்கும் கடை நடத்துபவா் தண்டபாணி. இவரது கடையில் வேலை செய்பவா் சதாம். இவா் தண்டபாணியின் மகன் வகுதன் (4) என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, இரு சக்கர வாகனம் மீது பொக்லைன் இயந்திரம் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த சிறுவன் வகுதன் உயிரிழந்தாா். காயமடைந்த சதாம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விபத்து குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாணை நடத்தினா்.