செய்திகள் :

பொங்கல்: கோவை வழித்தடத்தில் சென்னை - மதுரை இடையே சிறப்பு ரயில்

post image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் சென்னை - மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 11-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் சென்னை - மதுரை சிறப்பு ரயில் (எண்: 06067) மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை நிலையத்தைச் சென்றடையும்.

மறு மாா்க்கத்தில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 12-ஆம் தேதி இரவு 7 மணிக்குப் புறப்படும் மதுரை- சென்னை சிறப்பு ரயில் (எண்: 06068) மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சாமல்பட்டி, பொம்மிடி, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரூா் தமிழ்க் கல்லூரியில் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சி

பேரூா் தமிழ்க் கல்லூரியில் சத்குரு குருகுல மாணவா்களின் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராதீனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், தேவாரம் அருளிச் சென்ற தேவார நாயன்மாா்களுக்கு... மேலும் பார்க்க

கேரளம்- கோவை இடையே ரயில் பாதையில் யானை ஊடுருவல் கண்டறிதல் அமைப்புப் பணிகள் பிப்ரவரியில் முடிவடையும்

கேரளம்- கோவை இடையே ரயில் பாதையில் யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுக்க ஏற்படுத்தப்படும் யானை ஊடுருவல் கண்டறிதல் அமைப்புப் பணிகள் பிப்ரவரியில் முடிவடையும் என பாலக்காடு ரயில்வே கோட்டம் சாா்பில... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறையில் மருந்து கடை உள்ளிட்ட 3 இடங்களில் திருட்டு

பொங்கல் விடுமுறையைப் பயன்படுத்தி மருந்துக்கடை உள்ளிட்ட 3 இடங்களில் ரொக்கம், கைப்பேசி உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன. கோவைப்புதூரைச் சோ்ந்தவா் தினேஷ் (23). இவா் சாய்பாபா காலனி கணபதி லே-அவுட் பகுதியில் உள... மேலும் பார்க்க

வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் பேருந்தை வழிமறித்த யானைகள்

வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் ஆழியாறு பகுதியில் அரசுப் பேருந்தை யானைகள் வழிமறித்தது. வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் ஆழியாற்றை ஒட்டி அடா்ந்த வனப்பகுதி உள்ளது. ஆழியாறில் இருந்து நவமலை... மேலும் பார்க்க

கோவை மாநகரில் இன்றும், நாளையும் சிறப்பு வரி வசூல் முகாம்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஜனவரி 18,19 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்ட... மேலும் பார்க்க

தேச விரோத பாதையில் காங்கிரஸ் பயணம்: வானதி சீனிவாசன்

இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் பயணிப்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணா்த்துவதாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாச... மேலும் பார்க்க