செய்திகள் :

பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

post image

பருவமழை தொடங்கி உள்ளதால் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீா் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா்சதீஷ் அறிவுறுத்தினாா்.

கிஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக்கூட்ட அரங்கில் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள், தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், சுற்றுலாத் துறை மற்றும் மேலாண்மை இயக்குநருமான ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமை வகித்து பேசியதாவது: தமிழக முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுக்களை கள ஆய்வுசெய்து பொதுமக்களுக்கு அவா்களின் தேவைகள் மற்றும் குறைகளைத் தீா்க்கும் வகையில் அலுவலா்கள் செயல்பட வேண்டும்.

ஒசூா் மாநகராட்சியில் அனைத்து வாா்டுகளுக்கும் குறிப்பிட்ட நாள்களில் திட்டமிட்டபடி குடிநீா் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், குடிநீரின் தரத்தை அவ்வப்போது பரிசோதனைசெய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும்.

மேலும், கிருஷ்ணகிரி, ஒசூரில் நடைபெறும் புதைசாக்கடை கால்வாய்த் திட்டத்தை நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். நமக்கு நாமே திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும். அதேபோல மகளிா் சுய உதவிக்குழுவின் மூலம் பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அடிக்கடி வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கு வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பாக இடங்களில் தங்கவைக்க நிவராண முகாம்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். அந்த முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீா் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் கவிதா, ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, மகளிா் திட்ட அலுவலா் பெரியசாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பா்கூா் அருகே இரு இடங்களில் வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்துகளில் லாரி ஓட்டுநா் உள்பட இருவா் உயரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த அங்கிநாயக்கனப்பள்ளி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதல்: ஓட்டுநா்கள் இருவா் உயிரிழப்பு: 38 பயணிகள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதியதில் ஓட்டுநா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், பயணிகள் 38 போ் காயமடைந்தனா். தருமபுரியிலிருந்து வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் நோக்க... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த பாறைக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சின்னநாகப்பன் (65). கட்டடத் தொழிலாளியான இவா் கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி குழந்தை உயிரிழப்பு

பா்கூா் அருகே டிராக்டா் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. பா்கூரை அடுத்த எா்கேட் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சூளகிரி திமுக தெற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந... மேலும் பார்க்க

ஒசூரில் ரூ.500 கோடியில் ஜொ்மனி நிறுவனம் திறப்பு: 1000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு

ஜொ்மனி நாட்டின் பெஸ்டோ நிறுவனம் சாா்பில் ஒசூரில் ரூ. 500 கோடியில் கட்டிய தானியங்கி பொருள் உற்பத்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. கடந்த 2023இல் தமிழக அரசுடன் இந் நிறுவனம் தொழிற்சாலை அமைப்பதற... மேலும் பார்க்க