பொன்னேரியில் பலத்த மழை
பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தததன் காரணமாக குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது.
கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்கரில் மழை பெய்து வருகிறது. பொன்னேரி பகுதியில் கடந்த 10 நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்ய வில்லை. இதனால் வெப்பம் மற்றும் புழுக்கத்தில் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை பொன்னேரி, மீஞ்சூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இதமான காற்று வீசியது.
சிறிது நேரத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதமான காற்றுடன் பெய்த மழை காரணமாக அப்பகுதியில்
வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.