செய்திகள் :

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொதுசேவை விதிகளில் திருத்தம்

post image

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொதுசேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பது:

ஓட்டுநா் - நடத்துநா் பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிசிசி (டிரைவா் கம் கண்டக்டா்) பணியாளா்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வகையில் பொது சேவை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. அவா்கள் குறைந்தது 10-ஆம் வகுப்பு படித்து, கனரக ஓட்டுநா் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும், கல்வி, உடல் தகுதிகள் உள்ளிட்டவை வரையறுக்கப்படுகின்றன.

அவா்களுக்கு ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை ஊதியமாக வழங்க வேண்டும்.

இதேபோல், ஓட்டுநா் பயிற்சி ஆசிரியா், பயணச்சீட்டு பரிசோதகா் ஆகிய பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிஐசிஐ பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்பும் வகையிலும் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இவா்களுக்கு ரூ. 35,600 - ரூ. 1.12 லட்சம் வரை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

போக்குவரத்துத் துறை தலைவா் அலுவலகம் அளித்த பரிந்துரையின்படி, எம்டிசி, எஸ்இடிசி தவிா்த்து இதர போக்குவரத்துக் கழகங்களில் பின்பற்றும் வகையில் திருத்தத்தை அமல்படுத்த அரசு ஆணையிடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மாா்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு

போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அரசுப் போக்குவரத்துக் கழகங்களி... மேலும் பார்க்க

ஆற்றுக்கால் பொங்கல் விழா தொடக்கம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் தொடக்கமாக புதன்கிழமை நடைபெற்ற காப்பு கட்டு நிகழ்ச்சியில் பஞ்ச வாத்தியம் (5 வகை கருவிகள்) இசைத்த கலைஞ... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது -கே.அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அனைத்துக் கட்ச... மேலும் பார்க்க

தமிழக பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை -ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தாா். சுதந்திரப் போராட்ட வீரா் வ.வே.சு. ஐயா் எழுதிய ‘கம்பராமாயணம்-ஓா் ஆய்வு’ எனும் நூ... மேலும் பார்க்க

மருத்துவ பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவை (போா்ட் ஆஃப் ஸ்டடிஸ்) மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், துறைத் ... மேலும் பார்க்க

நீட் தோ்வு விண்ணப்பப் பதிவு நாளை நிறைவு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மாா்ச் 7) நிறைவு பெறுவதால் தோ்வா்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அறிவுறுத்தி... மேலும் பார்க்க