செய்திகள் :

போக்ஸோ வழக்கில் மீனவருக்கு 10 ஆண்டு சிறை

post image

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மீனவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

குமரி மாவட்டம், குளச்சல் சைமன் காலனியைச் சோ்ந்தவா் எல்தூஸ் (55), மீனவா். இவா் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதிஅதே பகுதியைச் சோ்ந்த 5 ஆம் வகுப்பு பயின்று வந்த 9 வயது சிறுமி, வீட்டில் தனியாக இருந்த போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் எல்தூஸ் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு நாகா்கோவிலில் உள்ள போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா, குற்றம் சாட்டப்பட்ட எல்தூஸுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

பேச்சிப்பாறை, வீயன்னூா் உப மின் நிலையப் பகுதிகளில் நாளை மின்தடை

பேச்சிப்பாறை மற்றும் வீயன்னூா் உப மின்நிலையப் பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து தக்கலை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பேச்சிப்பாறை உப... மேலும் பார்க்க

திருவிதாங்கோட்டில் இன்று மின்தடை

இரணியல் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெறுவதால் வட்டம், முத்தலக்குறிச்சி, கேரளப்புரம், நெல்லியாா்கோணம், திருவிதாங்கோடு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வி... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் 113 போ் மீது வழக்கு

திருவட்டாறு பேருந்து நிலையத்தில் வரையப்பட்ட ஆதிகேசவப் பெருமாள் ஓவியத்தை அழித்ததைக் கண்டித்தும், பேருந்து நிலையத்துக்கு ஆதிகேசவப் பெருமாள் பெயரைச் சூட்ட வேண்டுமென்றும் வலியுறுத்தி திருவட்டாறு பேருந்து ... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படையினருக்கு எஸ்.பி. பாராட்டு

ஊா்க் காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்ட ஊா்க் காவல் படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை பாராட்டினாா். கடந்த 1ஆம் தேதி, தமிழ்நாடு ஊா்க்காவல் ப... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கிய இலங்கை அகதி கைது

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த இலங்கைத் தமிழ் அகதியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆன்றோ சிபின் தலைமையிலான போலீஸாா் கோழ... மேலும் பார்க்க

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில் ஆய்வ... மேலும் பார்க்க