செய்திகள் :

போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில் நடந்தது என்ன?

post image

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக இருக்கிறது. குஜராத் கடல் பகுதி மட்டுமல்லாது குஜராத் துறைமுகத்திற்கும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

அடிக்கடி பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் குஜராத்திற்குள் படகில் போதைப்பொருளை கடத்தி வருகின்றனர். இதனால் குஜராத் கடல் பகுதியில் எப்போதும் பாதுகாப்பு பலமாக இருக்கும்.

குஜராத் எல்லைக்குள் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக குஜராத் தீவிரவாத தடுப்பு படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே இது குறித்து கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். குஜராத் தீவிரவாத தடுப்பு படையினரும் கடலுக்குள் விரைந்து சென்றனர்.

வேறு இடத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்புப்படை கப்பல் உடனடியாக சர்வதேச எல்லைக்கு திருப்பிவிடப்பட்டது.

நள்ளிரவில் கடுமையான இருட்டு நிலவியது. அந்த இருட்டையும் பொருட்படுத்தாமல் சந்தேகத்திற்கு இடமான வகையில் மர்ம படகு ஒன்று இந்திய கடல் எல்லைக்குள் வருவதை கவனித்தனர். உடனே அந்த படகை நோக்கி வேகமாக பாதுகாப்புப்படை கப்பலை செலுத்தினர்.

இந்திய கப்பல் வருவதை பார்த்த கடத்தல் கும்பல், படகில் இருந்த போதைப்பொருள்களை கடலில் தூக்கிப்போட்டுவிட்டு அவசர அவசரமாக சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றுவிட்டனர்.

இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் வருவதற்குள் அவர்கள் சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றுவிட்டதால் அவர்களை பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் கடலில் தூக்கிப்போட்ட போதைப்பொருள் கடலில் மிதந்துகொண்டிருந்தது. இரவு முழுக்க தேடுதல் நடத்தி 300 கிலோ எடையுள்ள மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மீட்கப்பட்ட போதைப்பொருளுடன் கடலோர பாதுகாப்பு படையினர்

கடத்தல்காரர்கள் எவ்வளவு போதைப்பொருளை கடலில் போட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதில் 300 கிலோ மட்டுமே சிக்கியது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1800 கோடியாகும். அப்போதைப்பொருளை போர்பந்தர் கடற்கரைக்கு கொண்டு வந்து குஜராத் தீவிரவாத தடுப்புபடையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து குஜராத் சர்வதேச எல்லையில் ரோந்துப்பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க

`ரயில்வே போலீஸுக்கு வேலை செஞ்சவன், இன்னைக்கு `ஏ’ கேட்டகிரி ரௌடி’ - காட்பாடி அலெக்ஸின் க்ரைம் ஹிஸ்டரி

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடி அலெக்ஸ். வழிப்பறிக் கொள்ளை, கொலை என 38 குற்ற வழக்குகளில் தொடர்புடைய அலெக்ஸ் `ஏ’ கேட்டகிரி ரௌடியாக வலம் வந்துகொண்டிருக்கிறான். கடந்த 12-10-2016 -லிருந்த... மேலும் பார்க்க

Mollywood: ``போதையில் தவறாக நடந்தார்..'' - நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை வின்சி அலோஷியஸ் புகார்

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ, வின்சி அலோஷியஸ், தீபக் பரம்போல், ஸ்ரீகாந்த் கண்டரகுலா ஆ... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்; மகளைக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த தாய்... உபி-யில் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தன் உறவினரின் 14 வயது மகளைக் காணவில்லை என அளித்த புகாரின் பேரில், நடத்தப்பட்ட விசாரணை 2025 ஏப்ரல் மாதத்தில் முடிவுக்கு வந்துள்ளது. புகாரின் அடிப்படையில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களை பாதிக்கும் ரெளடிகளின் மீம்ஸ் & ரீல்ஸ்... கொலை சம்பவங்களின் பகீர் பின்னணி

நெல்லையில் தனியார் பள்ளியில் பென்சிலை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில் வகுப்பறையிலேயே தன் நண்பரை அரிவாளால் வெட்டியதுடன், அதனை தடுக்க முயன்ற ஆசிரியையையும் 8-ம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெ... மேலும் பார்க்க