செய்திகள் :

போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்! முகத்தில் உருவான ஓட்டை!

post image

அமெரிக்காவில் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையான பெண்ணின் முகத்தில் ஓட்டை உருவாகி அவருக்கு தற்போது 15க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இலினொயிஸ் மாகாணத்தின் சிகாகோ நகரத்தைச் சேர்ந்த கெல்லி கோசிரா (வயது 38) என்ற பெண் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு அவரது நண்பர்களில் ஒருவர் வழங்கிய கோக்கைன் எனும் போதைப் பொருளை மூக்கின் வழியாக உரிந்து போதையடைந்துள்ளார்.

அன்று முதல் அவர் அந்த போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி அதற்காக சுமார் ரூ.70 லட்சம் அளவிலான பணத்தை செலவு செய்து தொடர்ந்து அவர் அந்த போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர் அந்த பழக்கத்திற்கு அடிமையான சில மாதங்களில் அவரது மூக்கிலிருந்து தசைகள் கிழிந்து ரத்தத்துடன் சேர்ந்து வெளியாகியுள்ளது. அந்த காயங்கள் அனைத்தும் அதுவாக குணமாகிவிடும் என அவர் நினைத்து அதனைக் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார். ஆனால், சில நாள்களில் அவரது மூக்கு பகுதி முழுவதுமாக பாதிப்படைந்து, அங்கு ஓர் ஓட்டை உருவாகியுள்ளது.

இதையும் படிக்க: தென் ஆப்பிரிக்கா: புதியதாக மூன்று குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு!

இதைக் கண்ட அவரது குடும்பத்தினரின் தலையீட்டால், அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் போதைப் பழக்கத்தை கைவிட்டு அதிலிருந்து மீண்டுள்ளார். அதன் பின்னர் அவரது முகத்தில் விழுந்த ஓட்டையை சரிசெய்ய சுமார் 15 அறுவைச் சிகிச்சைகள் அவருக்கு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதில், அவரது நெற்றியிலிருந்து எடுக்கப்பட்ட தோலை வைத்து அவரது மூக்கை மறு வடிவமைப்பு செய்யும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

தற்போது, அவரது அறுவைச் சிகிச்சையின் காயங்கள் குணமாகி வரும் நிலையில் தனது அனுபவத்தின் வாயிலாக போதைப் பொருள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.

முதல்முறை வெளிநாடு பயணம் செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!

பாகிஸ்தானில் முதல் முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் அந்நாட்டு மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா, குஜராத், சியால்கோட், மண்டி, பஹாவுத்தீன் மற்றும... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்கா: புதியதாக மூன்று குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு!

தென் ஆப்பிரிக்கா நாட்டில் மூன்று புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறையின் செய்தி தொடர்பாளர் ஃபோஸ்டர் மொஹாலே கூற... மேலும் பார்க்க

மசூதியில் குண்டு வெடிப்பு: தலைமை இமாமை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கைபர் பக்துன்குவாவின் மொந்ஷேரா மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தின் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அம்பலா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (மார்ச்.1) வழக்கு விசாரணைக்காக ஒரு நபர் ஆஜராகியுள்ளார். அப்போது... மேலும் பார்க்க

அசாம்: ரூ.2.2 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.சாச்சார் மாவட்டத்தில... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் பலியிடுவதைத் தவிர்க்க வேண்டும்! மக்களுக்கு அரசர் வலியுறுத்தல்!

மொராக்கோவில் பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடப்படுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியான சூழ... மேலும் பார்க்க