செய்திகள் :

மசூதியில் குண்டு வெடிப்பு: தலைமை இமாமை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்!

post image

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

கைபர் பக்துன்குவாவின் மொந்ஷேரா மாவட்டத்திலுள்ள மசூதியில் நேற்று (பிப்.28) மதியம் நடைபெற்ற தொழுகையின்போது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் தலைமை இமாம் உள்பட 8 பேர் தற்போது பலியாகியுள்ளனர். மேலும், படுகாயமடைந்த 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜமாய்த் உலமா இஸ்லாம் பிரிவின் தலைமை இமாம் மற்றும் மதரஸா-இ-ஹக்கானியா மசூதியின் பொறுப்பாளருமான ஹமீதுல் ஹக் ஹக்கானியை படுகொலை செய்யும் நோக்கத்தில் இந்த தாக்குதலானது நடத்தப்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (பிப்.28) ஹமீதுல் ஹக் அவரது கூட்டாளிகளுடன் தனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் அவர்களது வழியை மறித்து நடத்திய இந்த தற்கொலை குண்டு வெடிப்பில் அவருடன் சேர்த்து 5 பேர் பலியாகினர். பின்னர், படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி பலியானவர்களுடன் சேர்த்து தற்போது 8 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: டிரம்ப் - ஸெலென்ஸ்கி இடையே காரசார வாக்குவாதம்! நடந்தது என்ன?

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு மதம் சார்ந்த அமைப்புகளுக்கும் தொடர்பில்லை என அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இஸ்லாமிய அறிஞர்கள் சங்கத்தின் மாநாட்டில், பெண் கல்வியைத் தடுப்பது இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது என்று ஹமீதுல் ஹக் பேசியிருந்தார். அதன் பின்னர் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 1968 ஆம் ஆண்டு பிறந்த ஹமிதுல் ஹக் அவரது தந்தையான மௌலானா சமியுல் ஹக்கின் மரணத்திற்கு பின் ஜமாய்த் உலமா இஸ்லாம் பிரிவின் தலைவராக பதவியேற்று கொண்டார். இருப்பினும், இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறை வெளிநாடு பயணம் செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!

பாகிஸ்தானில் முதல் முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் அந்நாட்டு மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா, குஜராத், சியால்கோட், மண்டி, பஹாவுத்தீன் மற்றும... மேலும் பார்க்க

போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்! முகத்தில் உருவான ஓட்டை!

அமெரிக்காவில் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையான பெண்ணின் முகத்தில் ஓட்டை உருவாகி அவருக்கு தற்போது 15க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இலினொயிஸ் மாகாணத்தின் சிகாகோ நகரத்தைச் சேர்ந்... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்கா: புதியதாக மூன்று குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு!

தென் ஆப்பிரிக்கா நாட்டில் மூன்று புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறையின் செய்தி தொடர்பாளர் ஃபோஸ்டர் மொஹாலே கூற... மேலும் பார்க்க

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தின் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அம்பலா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (மார்ச்.1) வழக்கு விசாரணைக்காக ஒரு நபர் ஆஜராகியுள்ளார். அப்போது... மேலும் பார்க்க

அசாம்: ரூ.2.2 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.சாச்சார் மாவட்டத்தில... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் பலியிடுவதைத் தவிர்க்க வேண்டும்! மக்களுக்கு அரசர் வலியுறுத்தல்!

மொராக்கோவில் பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடப்படுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியான சூழ... மேலும் பார்க்க