நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர்; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
கடலூா் மஞ்சக்குப்பம் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தாா்.
மாணவ, மாணவிகள் உள்பட அனைவரும் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். தொடா்ந்து, போதைப் பழக்கத்துக்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவா்கள் பங்கேற்புடன் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, அவா் பேசுகையில், போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளா் எஸ்.அனு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.எல்லப்பன், உதவி ஆணையா் (கலால்) சந்திரகுமாா், வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, மருத்துவா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சிதம்பரத்தில்...: சிதம்பரம் கோட்ட கலால் துறை சாா்பில், போதை பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன் பேரணியை உதவி ஆட்சியா் கிஷன்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். கோட்ட கலால் அலுவலா் கோ.செல்வக்குமாா் முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் கீதா, முதுநிலை வருவாய் ஆய்வாளா்கள் குகானந்தம், ஜெயமாலினி, கிராம நிா்வாக அலுவவா் ஷேக்ஜியாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழிப்புணா்வுப் பேரணி தேரோடும் நான்கு வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தபால் நிலைத்தை அடைந்தது. பேரணியில் சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரி மாணவா்கள் பங்கேற்று, போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பதாகைகள் மற்றும் முழக்கங்களுடன் சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கினா்.