செய்திகள் :

பாஜக - அதிமுக கூட்டணியில் தவெக? "வாய்ப்புகள் இருக்கு; காரணம்..." - ராஜேந்திர பாலாஜி சொல்வது என்ன?

post image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில் NDA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, "தேர்தலில் நாங்கள் NDA கூட்டணியின் கீழ் போட்டியிடுகிறோம். அதிமுக-வில் இருந்து முதல்வர் வேட்பாளர் வருவார்” என்று எடப்பாடியின் பெயரைக் குறிப்பிடாமல் அமித்ஷா பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா
எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா

இந்நிலையில், புதுக்கோட்டையில் இன்று (ஜூன் 27) செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் அமித்ஷாவின் இந்தப் பேச்சுக் குறித்து கேள்வி எழுப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “NDA கூட்டணியைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாடு தலைவர் எடப்பாடிதான். NDA கூட்டணியின் பிரிகேடியர் கட்டளை தலைவர் எடப்பாடியார்தான்.

முடிவை அவர்தான் தெரிவிக்க வேண்டும். அவரின் கருத்துதான் இறுதியான கருத்து. அமித்ஷா எந்த அர்த்தத்தில் எதற்குச் சொன்னார் என்று தெரியவில்லை. அதிமுக முதலமைச்சர் எடப்பாடிதான்” என்றிருக்கிறார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

தொடர்ந்து NDA கூட்டணியில் தவெக இணைக்கிறதா என்ற கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள். அதற்கான நகர்வுகள் நகர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

வாய்ப்புகள் இருக்கிறது. காரணம், திமுக-வை எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடியார் நினைக்கிறார்” என ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சர்ச்சையான ஸ்ரீவில்லிபுத்தூர் அர்ச்சகர்கள் விவகாரம்- அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் விளக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் குத்தாட்டம் ஆடிய, கோயிலுக்கு வரும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளிய... மேலும் பார்க்க

சிந்து நதி நீர்: "பாகிஸ்தானின் கடிதங்கள் இந்தியாவின் மனதை மாற்றாது" - அமைச்சர் திட்டவட்டம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற தொடர்ந்து கடிதங்கள் எழுதப்பட்டாலும், இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். "சி... மேலும் பார்க்க

PMK: பாமக-வை ராமதாஸ் தொடங்கியது ஏன்? - மக்கள் மருத்துவர் டு மூச்சிருக்கும் வரை நானே தலைவர் |In-depth

1987 இல் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் ஆட்சி செய்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. மருத்துவர் ஒருவரின் தலைமையில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலைகளில் மரங்களை வெட்டி போட்டு பாதைகளை தடுத... மேலும் பார்க்க

`இந்தித் திணிப்புக்கு எதிராக...'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தாக்கரே சகோதரர்கள்!

மகாராஷ்டிரா பள்ளிகளில் நடப்பு ஆண்டு முதல் 1-5வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி அறிமுகம் செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. இதற்கு கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெர... மேலும் பார்க்க

"எங்களால்தான் உடை அணிகிறீர்கள்" - பாஜக எல்எல்ஏ சர்ச்சை பேச்சு; மகாராஷ்டிராவில் வலுக்கும் எதிர்ப்பு

மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்த அரசு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதால் தேர்... மேலும் பார்க்க

``அரசியலமைப்புலிருந்து 'சோசலிஸ்ட், மதச்சார்பற்ற' என்ற சொற்கள் நீக்க வேண்டும்" - RSS பொதுச் செயலாளர்

ஜூன் 25, 1975 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த ஆண்டுடன் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. பா.ஜ.க தலைமையிலான ம... மேலும் பார்க்க