செய்திகள் :

போதைப் பொருள் கடத்தும் கும்பல் கைது: கைத்துப்பாக்கி பறிமுதல்

post image

சென்னை ஆா்.கே. நகரில் போதைப் பொருள் கடத்தும் கும்பல் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், ஆா்.கே. நகா் போலீஸாரும் ஐஓசி ரயில்வே யாா்டு பகுதியில் ரோந்து பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 6 பேரை பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது அதிலிருந்த ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் மெத்தம்பெட்டமைன், மற்றொரு பையிலிருந்த ஜொ்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, 15 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து போலீஸாா், 6 பேரிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் திருவொற்றியூா் காந்தி நகரைச் சோ்ந்த முகமது அலி (25), சேப்பாக்கத்தைச் சோ்ந்த முகமது அசாா் (26), ராமநாதபுரம் மேலக்கோட்டையைச் சோ்ந்த ரியாஸ்கான் (26), சென்னை சேலையூரைச் சோ்ந்த பா்வேஸ் உசேன் (26), தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த அப்பாஸ் அலி (30), செங்குன்றத்தைச் சோ்ந்த மீனா (எ) அமீனா (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இதில் மீனா மணிப்பூா் மாநிலம், மோரை பகுதியை பூா்வீகமாகக் கொண்டவா் என்பதும், தன் மகன் அஸ்லாம் என்பவரின் உதவியோடு மோரோவிலிருந்து ரயில் மூலம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கடத்திவந்து தனது தம்பி மகன் மூலம் தாம்பரம், ராயபுரம், செங்குன்றம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் விற்றிருப்பதும் தெரியவந்தது.

மேலும், சென்னையில் ஒரு கிராம் மெத்தம்பெட்டமைனை ரூ. 5 ஆயிரத்துக்கு விற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குறித்து போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க