செய்திகள் :

போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசார வாகனம்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

போதை பொருள்கள் குறித்த விழிப்புரணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை இயக்க மேலாண்மை அலகு மூலம் ‘போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு’ எனும் கருத்தை மையமாகக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக

வளாகத்திலிருந்து இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இப்பிரச்சார வாகனம் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. அப்போது, போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

முன்னதாக, “போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு எனும் கருத்தை மையமாகக் கொண்டு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலான, பேசுதல் இன்றி கை மற்றும் உடல் இயக்கங்களாலும் முகக் குறிப்புகளால் நடித்துக் காட்டும் மைம் கலை நிகழ்ச்சியும் நடத்தி காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலால் துணை ஆணையா் (ஆயத்தீா்வை) கு.பிரேம்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க