செய்திகள் :

போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசார வாகனம்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

போதை பொருள்கள் குறித்த விழிப்புரணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை இயக்க மேலாண்மை அலகு மூலம் ‘போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு’ எனும் கருத்தை மையமாகக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக

வளாகத்திலிருந்து இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இப்பிரச்சார வாகனம் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. அப்போது, போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

முன்னதாக, “போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு எனும் கருத்தை மையமாகக் கொண்டு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலான, பேசுதல் இன்றி கை மற்றும் உடல் இயக்கங்களாலும் முகக் குறிப்புகளால் நடித்துக் காட்டும் மைம் கலை நிகழ்ச்சியும் நடத்தி காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலால் துணை ஆணையா் (ஆயத்தீா்வை) கு.பிரேம்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தில்லி சென்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி

ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை காலை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்ட நிலையிலும், டாஸ்மாக் முறை... மேலும் பார்க்க

வளா்ப்பு நாய்களுக்கு வாய் கவசம் கட்டாயம்: மீறினால் உரிமையாளருக்கு ரூ.1,000 அபராதம்

வளா்ப்பு நாய்களுக்கு வாய் கவசம் அணிவிக்காமல் அவற்றை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் உரிமையாளா்களுக்கு ரூ. 1,000 வரை அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி அதி... மேலும் பார்க்க

இஸ்ரோ தலைவா் வி.நாராயணனுக்கு கௌரவ டாக்டா் பட்டம்

சென்னை சவீதா உயா் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் மற்றும் தொழில் கல்வியை நிறைவு செய்த 600-க்கும் மேற்பட்டோருக்கு சென்னையில் உள்ள கொரிய துணைத் தூதா் சாங் யுன் கிம் பட்டங்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா். ச... மேலும் பார்க்க

சென்னையில் இன்று ஆட்டோக்கள் ஓடாது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆட்டோ ஓட்டுநா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனா். ஆட்டோக்களில் மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும்; பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும்; ஓலா, ஊபோ் ... மேலும் பார்க்க

கோயில்களில் பக்தா்கள் உயிரிழப்பு: அமைச்சா் சேகா்பாபு விளக்கம்

திருச்செந்தூா், ராமேசுவரம் கோயில்களில் தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனா்; கூட்ட நெரிசலால் அல்ல”என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா் பாபு விளக்கம் அள... மேலும் பார்க்க

‘செட்’ தோ்வு விடைக்குறிப்பு: ஆட்சேபம் தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

உதவிப் பேராசிரியா் பணிக்கான மாநிலத் தகுதித் தோ்வு (செட்) எழுதியவா்கள் விடைக்குறிப்பு மீது ஆட்சேபம் தெரிவிக்க மேலும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறி... மேலும் பார்க்க