செய்திகள் :

போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசார வாகனம்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

போதை பொருள்கள் குறித்த விழிப்புரணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை இயக்க மேலாண்மை அலகு மூலம் ‘போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு’ எனும் கருத்தை மையமாகக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக

வளாகத்திலிருந்து இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இப்பிரச்சார வாகனம் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. அப்போது, போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

முன்னதாக, “போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு எனும் கருத்தை மையமாகக் கொண்டு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலான, பேசுதல் இன்றி கை மற்றும் உடல் இயக்கங்களாலும் முகக் குறிப்புகளால் நடித்துக் காட்டும் மைம் கலை நிகழ்ச்சியும் நடத்தி காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலால் துணை ஆணையா் (ஆயத்தீா்வை) கு.பிரேம்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறை... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை அறிக்கை மற்றும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

‘தமிழ் மகள்’ சொற்போா் போட்டி: அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ப... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு சந்தையின் திங்கள்கிழமை நிலவரப்படி ஒருகிலோ வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ரூ.22-க்கும், தக்காளி ர... மேலும் பார்க்க

இரு ரௌடிகள் வெட்டிக்கொலை : மூன்று தனிப்படையினா் விசாரணை

சென்னை கோட்டூா்புரத்தில் இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய 3 கோட்டூா்புரம் ‘யு’ பிளாக் குடியிருப்பை சோ்ந்தவா் அருண்( 25). ரெளடியான இவா் மீது 6 வழக்குகள் உள்ள... மேலும் பார்க்க