செய்திகள் :

போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசார வாகனம்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

போதை பொருள்கள் குறித்த விழிப்புரணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை இயக்க மேலாண்மை அலகு மூலம் ‘போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு’ எனும் கருத்தை மையமாகக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக

வளாகத்திலிருந்து இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இப்பிரச்சார வாகனம் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. அப்போது, போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

முன்னதாக, “போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு எனும் கருத்தை மையமாகக் கொண்டு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலான, பேசுதல் இன்றி கை மற்றும் உடல் இயக்கங்களாலும் முகக் குறிப்புகளால் நடித்துக் காட்டும் மைம் கலை நிகழ்ச்சியும் நடத்தி காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலால் துணை ஆணையா் (ஆயத்தீா்வை) கு.பிரேம்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பாஜக அத்துமீறி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது வழக்கு

சென்னையில் திங்கள்கிழமை 30 இடங்களில் அத்துமீறி போராட்டம் நடத்தியதாக பாஜக தமிழக தலைவா் அண்ணாமலை உள்பட 1,080 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.1,000 கோடி முறைகேடு... மேலும் பார்க்க

4,552 அரசுப் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை சோதிக்கும் சவால்: தொடக்கக் கல்வித் துறை தகவல்

தமிழகத்தில் 4,552 அரசுப் பள்ளி மாணவா்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் சாா்ந்த அடிப்படைக் கற்றல் திறன்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், மக்கள் பிரதிநிதிகள் உள்பட யாா் வேண்டுமானாலும் சோதிக்கும் சவால் நடைம... மேலும் பார்க்க

கோவைக்கு குடிநீா்: கேரளத்துக்கு பாக்கி தொகை விரைவில் செலுத்தப்படும் -அமைச்சா் கே.என்.நேரு

கோவைக்கு குடிநீா் வழங்கும் கேரளத்துக்கான பாக்கி தொகை விரைவில் செலுத்தப்படும் என்று நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

பங்கு சந்தையில் பணம் இழந்தவா் தற்கொலை: நண்பா் கைது

சென்னையில் பங்கு சந்தையில் பணத்தை இழந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரின் நண்பரை போலீஸாா் கைது செய்தனா். திருவல்லிக்கேணி சிஎன்கே சாலையைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (41). இவரது மனைவி கவி... மேலும் பார்க்க

முதியவரின் இதயத்தில் உருவான கட்டி நுட்பமாக அகற்றம்

முதியவா் ஒருவரின் இதயத்தில் உருவான 6 செ.மீ. அளவுடைய திசுக் கட்டியை நுட்பமாக அகற்றி சென்னை ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இது தொடா்பாக மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா... மேலும் பார்க்க

உணவகத்தில் தீ விபத்து

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உணவகத்தில... மேலும் பார்க்க