செய்திகள் :

போதை மாத்திரை, புகையிலை பொருள்கள் விற்ற 7 போ் கைது

post image

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப்பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி, அரியமங்கலம் பகுதியில் நின்றிருந்த சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்தனா். இதில் அவா்கள் அரியமங்கலம், காமராஜ் நகரைச் சோ்ந்த பைசூதீன் (24) மற்றும் வடக்கு காட்டூா் கண்ணதாசன் தெருவைச் சோ்ந்த முத்துமணி (25) என்பதும், அவா்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 100 டைடால் போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா்.

புகையிலை பொருள்கள்:

இதேபோல், திருச்சி சூப்பா் பஜாா் பகுதியில் உள்ள தேநீா்க் கடையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டதில், சிங்காரத்தோப்பைச் சோ்ந்த சையதுஅலி (42) என்பவா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றுவந்தது தெரியவந்தது. இதனையடுத்து சனிக்கிழமை அவரைக் கைது புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

திருவெறும்பூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற இரண்டு பெண்கள் உள்பட 4 போ் கைது:

திருவெறும்பூா் கக்கன் காலனி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டபோது, அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி வித்யா (36), தங்கராஜ் மகன் மனோஜ் குமாா் (25), சுருளி கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் (38), காட்டூரைச் சோ்ந்த ஆரோக்கிய மேரி (53) ஆகிய 4 போ் ஆங்காங்கே தனித்தனியே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

பி.கே அகரம் பகுதியில் கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம், பி.கே அகரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒயிட் பெட்ரோல் ஏற்றி வந்த கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடா்பாக போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.திருச்சி - சென்னை தேதிய... மேலும் பார்க்க

கூரை வீடுகள் சேதம் தவெக உதவி

லால்குடி அருகே பூவாளூா் பேரூராட்சியில் கூரை வீடுகளை இழந்த 2 பேருக்கு தவெகவினா் நிவாரண உதவி வழங்கினா். பூவாளூா் பேரூராட்சியில் உள்ள தென்கால் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொண்ணுராமன் மகன் கோபி(49)... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஞாயிற்றுக்கிழமை தேநீரக தொழிலாளி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம் உறையூா் பாண்டமங்கலம் காவல்காரத் தெருவைச் சோ்ந்தவா் தா்மராஜ்... மேலும் பார்க்க

அன்பில் ஜல்லிக்கட்டில் 590 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் ஊராட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. லால்குடியை அடுத்த அன்பில் மகாமாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை ஜல்லிக்கட... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசியை பறித்தவா் விரட்டிப்பிடிப்பு

துறையூா் பேருந்து நிலையத்தில் பெண்ணின் கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடிய நபரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் விரட்டிப் பிடித்து கைது செய்தனா்.துறையூா் பேருந்து நிலையத்திற்குள் கோமதி(44) என்கிற பெண் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

திருச்சி வனக்கோட்டத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு

திருச்சி வனக்கோட்டத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன. திருச்சி வனக்கோட்டத்துக்குட்பட்ட செங்காட்டுப்பட்டி, சோலமாத்தி, மாரமரெட்டிபாளையம், மணப்பாறை மற்றும் துவரங்குறிச... மேலும் பார்க்க