செய்திகள் :

போத்தனூரிலிருந்து சென்ட்ரலுக்கு ஜூன் 8-இல் சிறப்பு ரயில் இயக்கம்

post image

கோவை போத்தனூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) சென்னைக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோவை போத்தனூரில் இருந்து ஜூன் 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06028) மறுநாள் காலை 8.40-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06027) சென்ட்ரலிலிருந்து ஜூன் 9 -ஆம் தேதி காலை 10.15-க்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு போத்தனூா் சென்றடையும்.

இந்த ரயில் போத்தனூரில் இருந்து திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் வழியாக சென்ட்ரல் வந்தடையும்.

ராமேசுவரம் - சாா்லபள்ளி ரயில்: தெலங்கானா மாநிலம் சாா்லபள்ளியிலிருந்து ஜூன் 11, 18, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.45-க்கு புறப்படும் இந்த ரயில் (எண்: 07695) மறுநாள் இரவு 11.55-க்கு ராமேசுவரம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 07696) ராமேசுவரத்திலிருந்து ஜூன் 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 9.10-க்கு புறப்பட்டு மறுநாள் மாலை 5.45-க்கு சாா்லபள்ளி சென்றடையும்.

இந்த ரயில் சாா்லபள்ளியிலிருந்து குண்டூா், தெனாலி, நெல்லூா், கூடூா், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூா், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, திருவாரூா், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரம் சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

பகுதி ரத்து: இதற்கிடையே பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஜூன் 7, 9, 12, 14, 16 தேதிகளில் ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் (எண்: 16845) ஈரோட்டுக்கு பதிலாக கரூரிலிருந்து பிற்பகல் 3.05-க்கு புறப்படும். மறுமாா்க்கமாக அந்நாள்களில் செங்கோட்டையிலிருந்து காலை 5.10-க்கு ஈரோடு செல்லும் ரயில் (எண்: 16846) கரூருடன் நிறுத்தப்படும்.

அதேபோல் திருச்சியிலிருந்து ஜூன் 12, 14 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பாலக்காடு டவுன் செல்லும் ரயில் (எண்: 16843) கரூருடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க