செய்திகள் :

போரை நிறுத்தாத ரஷ்யா; உக்ரைனில் தொடரும் உயிர் பலிகள்! - என்ன நடந்தது?

post image

'இதோ முடிந்துவிடும்', 'அதோ முடிந்துவிடும்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்த ரஷ்ய - உக்ரைன் போர், வெற்றிகரமான பேச்சுவார்த்தையை கூட இதுவரை எட்டவில்லை.

ரஷ்யா, உக்ரைன் மீதான தனது தாக்குதலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. நேற்று இரவு ரஷ்யா உக்ரைன் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்தத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்து உள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்|அமெரிக்காவின் எச்சரிக்கை
டொனால்ட் ட்ரம்ப்|அமெரிக்காவின் எச்சரிக்கை

அமெரிக்காவின் எச்சரிக்கை

கடந்த வாரம் லண்டனில் நடந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னர், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் ட்ரம்ப்.

அந்த சமயத்தில், ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை நடத்த, அதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதனால், கோபமடைந்த ட்ரம்ப் ரஷ்யாவையும் கடுமையாக சாடியிருந்தார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில், அமெரிக்கா பேச்சுவார்த்தை மத்தியஸ்த்தில் இருந்து விலகிவிடும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வானஸ் அப்போது எச்சரித்தார்.

ரஷ்யா மீது நடவடிக்கை

இந்த நிலையில் தான், ரஷ்யா இன்னமும் இறங்கி வர தயாராக இல்லை. இது ரஷ்யா உக்ரைன் மீது தொடரும் தாக்குதல்கள் மூலமே தெள்ள தெளிவாகின்றது.

போப்பின் இறுதி சடங்கில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பிற்கு பின், போர் முடிவுக்கு வர இன்னும் காலம் ஆகும் என்று ட்ரம்ப் பேசியிருந்தார். ரஷ்யா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கைகளை கூட எடுக்கலாம் என்பது போலவும் பேசியிருந்தார்.

ஏப்ரல் 2-ம் தேதி அறிவிக்கப்பட்ட ட்ரம்பின் பரஸ்பர வரி பட்டியலில் ரஷ்யா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'என்னை சுடுங்கள்; ஆனால், பாகிஸ்தானுக்கு மட்டும் அனுப்பாதீங்க' - கதறும் பெண்மணி; பின்னணி என்ன?

ஒடிசா பலசோர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார் பாகிஸ்தானை சேர்ந்த 72-வயது பெண்மணி. இவரது அப்பா பீகாரை சேர்ந்தவர். பல்வேறு காரணங்களால் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானிற்கு அவர் இடம்பெயர்ந்துள்ளார். அவரது ... மேலும் பார்க்க

Pahalgam Attack: 'ஒருதலைபட்சமான, சட்டவிரோத நடவடிக்கை' - பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த சீனா

கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கலாம் என்று இந்தியா வலுவாக சந்தேகிக்க... மேலும் பார்க்க

Pahalgam Attack: ஷோயப் அக்தரின் சேனல் உட்பட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை; காரணம் என்ன?

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் நா... மேலும் பார்க்க

`அகவிலைப்படி உயர்வு; திருமண முன்பணம் ரூ.5 லட்சம்’ - அரசு ஊழியர்களுக்கு வெளியான அறிவிப்புகள்

சட்டப்பேரவையில் இன்று( ஏப்ரல் 28) அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதன்படி, “அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு 2025 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து வழங்க... மேலும் பார்க்க

மாஞ்சோலை : `அடுக்குமாடி வேண்டாம்; சமத்துவபுரம் வேண்டும்’ - தொழிலாளர்கள் வலியுறுத்துவது ஏன்?

மாஞ்சோலையிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், மறுவாழ்வு திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மதுரை மக்கள் கண்கானிப்பக செயல் இயக்குநர் ஹென்றி ... மேலும் பார்க்க

தஞ்சை அரசு மருத்துவமனை தீ விபத்து: ”உயிரைப் பணயம் வச்சு காப்பாத்தினோம்; ஆனா..”- கொதிக்கும் ஊழியர்கள்

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி மகப்பேறு சிகிச்சைப் பிரிவு வார்டில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வார்டு முழுவதும் புகை சூழ்ந்தது... மேலும் பார்க்க