செய்திகள் :

போர் விமானங்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான்: கர்னல் சோஃபியா குரேஷி

post image

புது தில்லி: போர் விமானங்களையும் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது பாகிஸ்தான். ஆனால், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அளவோடு பதிலடி கொடுத்து வருகிறது என்று இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி, இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, விமானப் படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.

அப்போது பேசிய இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, இந்தியாவை தேவையில்லாமல் சீண்டுகிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா தக்க முறையில் முறியடித்துள்ளது. எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய விமானப்படை தளங்களை தாக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. அதிவேக ஏவுகணைகளால் பஞ்சாப் விமானப்படை தளங்களை பாகிஸ்தான் தாக்க முயற்சித்துள்ளது. இந்தியா தரப்பில் பாலஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பதில் தாக்குதல் கொடுக்கப்பட்டுளள்து என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானின் ஆயுதங்களை இந்தியா தாக்கிய காணொலியை வெளியிட்டார் குரேஷி.

விமானப் படை விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கப்பட்டதாக வதந்தி பரவி வருகிறது. தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம். பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.

ஜம்மு - காஷ்மீரின் எல்லைப் பகுதிகளான பாரமுல்லா, பூஞ்ச், ரஜௌரி, அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா முறியடித்துள்ளது. டிரோன்கள் மற்றும் வெடிபொருள்களைக் கொண்டும் தாக்குதலை மேற்கொண்டது பாகிஸ்தான். இரு தரப்பிலும் கடுமையான மோதல் ஏற்பட்டு தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் ஆயுதக் கிடங்குகள், தாக்கப்பட்டுள்ளன. விமானப் படைத் தளத்தின் அருகே உள்ள மருத்துவமனைகளை பாகிஸ்தான் தாக்கியது.

மக்கள் வசிக்கும் பகுதியை ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்கியது. அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன என்று விளக்கம் கொடுத்தார் வியோமிகா சிங்.

விமானப் படைத் தளங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று, இன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வியோமிகா சிங் காட்டினார்.

மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமல்! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி

புது தில்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்திருப்பதௌ குறித்து வெளியுறவுச் செயலர் மிஸ்ரி இன்று(மே 10) மாலை 6 மணிக்கு புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் விளக... மேலும் பார்க்க

சிவப்பு எச்சரிக்கையின் கீழ் பார்மர் மாவட்டம்.. பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்!

ஆபரேன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டத்துக்குச் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான்... மேலும் பார்க்க

இந்தியா - பாக். பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா, ஜி7 நாடுகள் அழைப்பு!

வாஷிங்டன்: இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா செய்ய தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்திருக்... மேலும் பார்க்க

ஜம்மு: பாகிஸ்தான் தாக்குதலில் 8 வீரர்கள் காயம்

ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் காயமடைந்தனர். ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையில் சனிக்கிழமை பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் 8 எல்லைப் பாதுக... மேலும் பார்க்க

உ.பி.: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் வயலில் இருந்து மீட்பு

ஹத்ராஸில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் 7 வயது சிறுவனின் சடலம் வயலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹத்ராஸில் தினை வயல் ஒன்றில் இருந்து 7 வயது சி... மேலும் பார்க்க

தில்லியில் 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!

தில்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஸ்ரீநகர் மற்றும் சண்டிகர் உ... மேலும் பார்க்க