செய்திகள் :

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூருவுக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி!

post image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட் செய்தது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும் ஆப்கனுக்காக விளையாட விரும்பும் முகமது நபி!

தில்லி கேபிடல்ஸ் - 141/10

முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி 19.3 ஓவர்களின் முடிவில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிகபட்சமாக 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். சாரா பிரைஸ் 23 ரன்களும், அன்னாபெல் சதர்லேண்ட் 19 ரன்களும் எடுத்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் ரேணுகா சிங் மற்றும் ஜியார்ஜியா வேர்ஹம் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கிம் கார்த் மற்றும் எக்டா பிஸ்ட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு: முன்னாள் வீரர்

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி களமிறங்குகிறது.

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க

ரியான் ரிக்கல்டான் சதம், மூவர் அரைசதம்; ஆப்கானிஸ்தானுக்கு 316 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொட... மேலும் பார்க்க

மீண்டும் இந்திய அணியின் சீருடையில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்!

10 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட இடைவெளிக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் இருவரும் இந்திய அணியின் சீருடையில் களமிறங்கவுள்ளனர்.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 22... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: மீண்டும் அணியில் இணைந்த இங்கிலாந்து இளம் விக்கெட் கீப்பர்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து இளம்வீரர் ஜேமி ஸ்மித்துக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொ... மேலும் பார்க்க

விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில்!

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே பேசியுள்ளார்.கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, விராட் கோலி இதுவரை விளையாடியுள்ள 6 ... மேலும் பார்க்க