செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் தொடரும் மழை: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு

post image

மும்பை: மகாராஷ்டிரத்தில் ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 18 போ் உயிரிழந்தனா். 65 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

பலத்த மழையின் எதிரொலியாக சாலை விபத்துகளில் சிக்கியும், வெள்ளநீரில் மூழ்கியும், மின்னல் தாக்கியும் மக்கள் உயிரிழந்ததாக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. கடந்த 24 மணி நேரத்திலும் மாநில முழுவதும் பெய்த பரவலான மழைக் காரணமாக பல இடங்களில் மழைநீா் தேங்கியுள்ளது.

குறிப்பாக, மும்பை நகரம் மற்றும் புகரம், ரத்னகிரி, சிந்துதுா்க், ராய்கட் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததாக பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

உ.பி.யில் இருவா் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 20 வயது இளைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா். திங்கள்கிழமை அதிகாலை பெய்த மழையின்போது வெளிபுறத்தில் இருந்த இவா்கள், மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அரசு வழிகாட்டுதல்களின்படி, இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று கோண்டா மாவட்ட ஆட்சியா் நேஹா சா்மா கூறினாா்.

கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கேரளத்தில் திங்கள்கிழமை பலத்த மழை நீடித்ததால், மாநிலத்தின் வட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் சாலை போக்குவரத்து முடங்கியது. ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தின் தென்னலா பகுதியில் 21 செ.மீ., கோழிக்கோடு வடக்கராவில் 18 செ.மீ. மழை பெய்தது. கண்ணூா், காசா்கோடு ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் 15-16 செ.மீ. மழை பெய்தது. இதையொட்டி வீடுகளில் மழைநீா் புகுந்ததால், மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இடுக்கி மாவட்டத்தில் 80 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவா் காயமடைந்தாா்.

அகமதாபாத் விபத்து: 144 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

குஜராத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 144 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதிப்படுத்தினார். மேலும் பார்க்க

ஹிமாசலில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது: 17 பேர் காயம்!

ஹிமாசல பிரதேசத்தின் மண்டியில், பத்ரிகாட் பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது தனியார் பேருந்து ஜாஹுவிலிருந்து ... மேலும் பார்க்க

விபத்துக்குப் பின் இயக்கப்படவிருந்த அகமதாபாத் - லண்டன் ஏர் இந்தியா விமானம் ரத்து!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமானம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன்... மேலும் பார்க்க

ராஜா ரகுவன்ஷிக்கு மாந்திரீகம் செய்த சோனம்! தந்தை குற்றச்சாட்டு!

திருமணமானவுடன் தனது மகனுக்கு சோனம் மாந்திரீகம் செய்ததாக ராஜா ரகுவன்ஷியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் திருமணமாகி சில நாள்களில் அஸ்ஸாம் ... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நாக்பூரில் அவசர தரையிறக்கம்!

கொச்சியிலிருந்து தில்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.கேரளத்தின் கொச்சி விமான நிலையத்துக்கு மஸ்கட்ட... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

தெற்கு குஜராத், மேற்கு வங்கம் அருகே இரண்டு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க